மூத்த வீரர்கள் சொதப்பல்… நிதானமாக நின்று சதமடித்த மயங்க் அகர்வால்!

0
Follow on Google News

மயங்க் அகர்வால் தன்னுடைய நான்காவது சதத்தை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் அடித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் புஜாரா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதில் கேப்டன் கோலியின் விக்கெட் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இளம் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் நங்கூரம் பாய்ச்சி நின்று அணியை சரிவில் இருந்து மீட்டார். இதையடுத்து அவர் தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். 198 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களோடு தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்திய அணி தற்போது 4 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் சேர்த்துள்ளது.