நல்ல விமர்சனம்… ஆனாலும் பீதியைக் கிளப்பிய பைரஸி பிரிண்ட்!

0
Follow on Google News

மாநாடு திரைப்படம் ரிலிஸில் இறுதிக் கட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று திடீரென நாளைப் படம் வெளியாகவில்லை என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது சம்மந்தமாக என்ன காரணம் என்பதையும் அறிவிக்கவில்லை.

இதனால் படத்துக்காக முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் திரும்ப நள்ளிரவின் போது படம் நாளை ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். இப்படி மாறி மாறி அறிவிப்புகள் வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

ஒருவழியாக நேற்று காலை 8 மணிக் காட்சி முதல் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஆனால் இதை நினைத்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைய முடியாத அளவுக்கு முதல்நாளே பைரஸி பிரிண்ட் பல இணையதளங்களில் வெளியாகி பீதியைக் கிளப்பியுள்ளது.