பொய் சொல்லி தப்பித்த ரோகிணி… ஆனால் முத்துவிடம் உண்மையை போட்டுடைத்த மலேசியா மாமா..

0
Follow on Google News

சிறகடிக்க ஆசை சீரியலில் பல நான் திருடன் ஒரு நாள் வசமாக மாற்றுவான் என்பது போல தன்னுடைய குடும்பத்தாரை பொய் மேல் பொய் சொல்லி ஏமாற்றி வந்த ரோகினி, தற்பொழுது இனி தப்பிக்கவே முடியாது என்கின்ற சூழலில் வசமாக சிக்கிக் கொண்டார் ரோகிணி. இரண்டாம் முறை கர்ப்பம் குறித்து விஜயா ரோகினியை இறுக்கிப்பிடித்து கேள்வி கேட்கிறார்.

இந்த இதை சற்று எதிர்பார்க்காத ரோகினி ஆமாம் நான் இரண்டாம் முறை தான் கர்ப்பமடைய செக்கப் சென்றேன், ஆனால் ஏற்கனவே கர்ப்பம் அடைந்தது மனோஜ் குழந்தைதான். ஆனால் அது என்னுடைய தந்தை சிறையில் இருந்த நேரத்தில் அபார்ஷன் ஆயிருச்சு என்று ஒரு பொய்யை சொல்லி தப்பித்து விடுகிறார். இதை விஜயா நம்பினாலும் குடும்பத்தில் இருக்கிற சுருதி, மீனா, முத்து ஆகியோருக்கு சந்தேகம் வருகிறது.

இதில் முத்துவுக்கு மிகப்பெரிய பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து எப்படி நகையை திருடியது மனோஜ் தான் என்று உறுதி செய்து அவரை கண்டுபிடிப்பதற்காக பல வழிகளில் முயற்சித்து இறுதியில் மனோஜை இந்த நகையை திருடியது அவர்தான் என்று அவர் வாயாலேயே ஒத்துக்க செய்தாரோ அதேபோன்று ரோகிணி குறித்து தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார் முத்து.

இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் சீதா மூலமாக ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்து இரண்டாவது குழந்தைக்கு பரிசோதனைக்கு வருகிறார், இல்லை கரு உண்டாக்கி அபாஷனாகி இரண்டாவது குழந்தைக்கு பரிசோதனைக்கு வருகிறார் என்கின்ற தகவலை எப்படியாவது சேகரித்தது தரவேண்டும் என சீதாவிடம் முத்து கேட்க. இதுகுறித்து சீதா வேலை செய்யும் மருத்துவமனையில் விசாரித்து ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்திருக்கு தற்போது இரண்டாவது பிரசவத்துக்காக தான் பரிசோதனை செய்ய வந்திருக்கிறார் என்கின்ற தகவலை முத்துவுக்கு தெரிவிக்கிறார்.

ஆனால் முத்து ஏற்கனவே மீனா குடும்பத்தில் இருக்கிற அனைவருக்கும் சொல்லி ரோகினி எப்படி பொய்யை சொல்லி தப்பித்துக் கொண்டாரோ அது மாதிரி இம்முறை அவசரப்படாமல் முதலில் ரோகினியின் பின்னணி குறித்து விசாரிப்போம் என்கின்ற முயற்சியில் இறங்குகிறார். அப்படி தீவிர விசாரணையில் இறங்கும் பொழுது, முத்துவும் அவருடைய நண்பரும் சென்று கொண்டிருக்கையில் ரோகிணியின் மலேசியா மாமா சிக்கி விடுகிறார்.

உடனே முத்துவும் நண்பரும் சேர்ந்து மலேசியா மாமாவை அலேக்கா தூக்கி துருவி துருவி கேட்கிறார்கள், ஒரு கட்டத்தில் ரோகிணிக்கு யார், என்ன என்று எந்த ஒரு பின்புலமும் எனக்கு தெரியாது, மாமாவாக நடிக்க சொன்னார்கள் வந்து நடித்தேன் என தெரிவித்து விடுகிறார். அதுவும் ரோகிணி தோழி வித்யா சொல்லி தான் நடித்தேன். படத்தில் ஜான்ஸ் வாங்கி தரேனுக்கு சொன்னாங்க கடைசியில் ஏமாற்றி விட்டார்கள் என முத்துவிடம் மலேசியா மாமா உண்மையை சொல்லுகிறார்.

உடனே இந்த உண்மையை எங்களிடம் சொன்னதை அந்த பார்லர் அம்மாடா சொல்ல கூடாது, திரும்ப உன்ன நடிக்க கூப்பிட்டா வந்து நடிக்கணும் என சொல்கிறார் முத்து. இதன் பின்பு இந்த பார்லர் அம்மா பக்கா பிராடா இருக்கே என நண்பரிடம் முத்து தெரிவிக்க, அதற்கு முத்து நண்பர் எனக்கு அதே சந்தேகம் தான், மலேசியாவில் பெரிய கோடீஸ்வரர் குடும்பம் சொல்ராங்க பிறகு ஏன் பார்லர் வெச்சுருக்கணும், வேறு எதாவது பெரிய தொழில் செய்யலாமே என முத்து நண்பருக்கும் சந்தேகம் வருகிறது இதன் பின்பு அடுத்தடுத்து பல சந்தர்ப்பங்களில் முத்துவிடம் ஒவ்வொரு விஷயத்திலும் ரோகிணி மாட்ட இருக்கிறார்.