என்ன திமிரு சோபிதாவுக்கு… சமந்தா நாயாக பிறக்கட்டுமா.? சமந்தாவை சீண்டும் சோபிதா…

0
Follow on Google News

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சோபிதா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், ஏராளமான ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாக சைதன்யா சோபிதா நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சமந்தாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. சென்னை பல்லாவரத்தில் சாதாரண காலேஜ் படிக்கும் பெண்ணாக இருந்த சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி ஒற்றை ஆளாக சினிமாவில் நுழைந்து இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

2007 இல் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சமந்தா, தெலுங்கில் வெளியான ஏ மாயா சேசவா படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகப்பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடிக்க தொடங்கினார். சமந்தாவின் வசீகரமான சிரிப்பும் அழகான நடிப்பும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

இதனால் அவரின் மார்க்கெட் விறுவிறுவென உயர்ந்து இன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஜோடியாக நடித்து வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி கொண்டிருந்த சமயம் அது. இருவருக்கும் இடையே சினிமாவில் மட்டுமல்லாமல் ரியல் வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆனது.

நான்கு வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி இருவீட்டாரின் சம்மதத்துடன் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்து மூன்று ஆண்டுகளிலேயே விவாகரத்தை அறிவிக்க காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினர்.

ஏராளமான ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாத சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஓ அண்டவா பாட்டுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. சமந்தாவின் டான்ஸ் காகவே அந்த பாடல் செம ஹிட் ஆனது.இதை எடுத்து சமந்தாவின் மார்க்கெட் எகிறியது.

இவ்வாறு விவாகரத்துக்கு பிறகு சோர்ந்து விடாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் எப்போதும் இணையம் வலியாக ஆதரவு தெரிவித்து கொண்டே இருக்கிறார்கள்.இப்படியான நிலையில் நாகச் சைதன்யா சோபிதா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த புகைப்படங்கள் வெளியானதும் சமந்தாவின் தீவிர ரசிகர்கள் நாகச் சைதன்யாவை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை சோபிதாவின் சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.அந்தப் போஸ்டில் “நான் எப்போதும் என் அம்மாவுக்கு அப்பாவுக்கும் மகளாகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என் தங்கச்சி ஒரு நாயாக அல்லது வேறு எதுவாக இருந்தாலும் பிறக்கட்டும்” என பதிவிட்டிருக்கிறார்) .இதில் குறிப்பிடும் தக்க விஷயம் என்னவென்றால் சோபித்தாவின் சகோதரி பெயர் சமந்தாவாம்.

இந்த பதிவு மூலம் நடிகை சோபித்தா மறைமுகமாக நடிகை சமந்தாவை தாக்கியிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் விவாதம் செய்து வருகின்றனர். நாக சைதன்யா சோபிதா நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்கள் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்தாலும் இதுவரை சமந்தா அமைதி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.