திருமணம் செய்ய மாணவி மறுப்பு… 14 முறை கத்தியால் குத்திய போக்ஸோ குற்றவாளி.. திருச்சியில் நடந்த கொடூரம்..

0
Follow on Google News

திருச்சி : தமிழகத்தில் காதல் எனும்பெயரால் கொலை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதற்க்கு சமூகம் காரணமா இல்லை கலாச்சார சீர்கேட்டை ஊக்குவிக்கும் விதமாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் காரணமா என குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டிருப்பதாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அதிகுலம் கிராமத்தை சேர்ந்த மாணவி நேற்று முன்தினம் கொடூரமாக குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போத்தமேட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்.வயது 22 இவர் மணப்பாறை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ப்ளஸ் ஒன் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி அழைத்துசென்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேசவன் மீது போலீசார் வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர். ஒருவருடம் தண்டனை முடிந்து சிலநாட்களுக்கு முன்னர் வெளிவந்த கேசவன் மீண்டும் அந்த சிறுமியை பின்தொடர்ந்ததாக தெரிகிறது.

அந்த சிறுமி மறுக்கவே ” நான் சிறை சென்றது உன்னால்தான். உனக்காகத்தான். நீ என்னை வேண்டாம் என சொல்வாயா” என கேட்டுள்ளார். அப்போதும் அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனால் கோபமாக பேசிவிட்டு சென்ற கேசவன் நேற்று முன்தினம் நண்பகலில் மாணவிக்காக காத்திருந்தான் என சொல்லப்படுகிறது. அந்த அப்பாவி மாணவி இறுதித்தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வழிமறித்த கேசவன் என்னை கல்யாணம் செய்யாத நீ ஏன் உயிருடன் இருக்கவேண்டும் என கூறி மாணவியை 14 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தார். தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கு காவல்துறை கேசவனை வலைவீசி தேடிவந்தது. இதனிடையே நேற்று மாணவி கத்தியால் குத்தப்பட்ட பகுதிக்கு சரியாக இரண்டுகிலோமீட்டர் தொலைவில் உள்ள பூசாரி பட்டி ரயில்வே தண்டவாளத்தில் ஒரு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேசவனின் தந்தையுடன் சென்ற காவல்துறை அது கேசவன் தான் என உறுதிப்படுத்தியதும் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.