சசிகலா குடும்பத்தினரிடம் 80 கோடி கடன் வாங்கிய தனுஷ்.! மாமனார் ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தான் நடித்த படம் வெற்றியோ தோல்வியோ தனக்கு வரவேண்டிய சம்பளம் சரியாக தனக்கு வந்து விடும் என்பதால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது தனுஷ் சினிமா மற்றும் குடும்ப வாழ்கை, ஆனால் புதியதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அவர் மனைவியை இயக்குனராக அறிமுகம் செய்து வெளியான முதல் படம் “3” தோல்வியை சந்தித்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதன் பின் தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படத்தை தவிர சுமார் 13 படங்கள் வசூல் ரீதியாக பெரும் நட்டம் ஏற்பட்டது, இதில் நடிகை அமலாபால் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என விரும்பிய தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் அம்மா கணக்கு என்கிற படத்தை அவருக்காக தயாரித்தார், அதே போன்று வெற்றிமாறன் விருப்பத்துக்காக விசாரணை, அது மட்டுமின்றி தனது மனைவியின் தங்கை சௌந்தர்யா இயக்கத்தில் VIP 2 படத்தை தயாரித்து பணத்தை இழந்தார்.

ஒரு கட்டத்தில் பெரும் கடன் சுமைக்கு ஆளான தனுஷ், இதனால் அவர் சசிகலா குடும்ப உறுப்பினர்களின் ஒருவரான இளவரசி மகன் விவேக் அவர்களிடம் சுமார் 80 கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. விவேக் ஜெயா தொலைக்காட்சியின் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. அடுத்து படம் தயாரிக்க வேண்டும் என்றால் கூட கடன் வாங்கி தான் படம் தயாரிக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழலில் எப்படி வாங்கிய கடனை அடைக்க போகிறோம் என நெருக்கடியான சூழலில் இருந்தார் தனுஷ்.

இந்த நெருக்கடியான சூழலில் தான் தனது மனைவி மூலம் மாமனார் உதவியை நாடியுள்ளார் தனுஷ். தனது மருமகன் தனுஷ் கஷ்டம் அறிந்த மாமனார் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் தனுஷ் தயாரிப்பில் உருவான காலா படத்தில் நடித்து மருமகனுக்கு உதவி கரம் நீட்டியுள்ளார், இந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து இளவரசி மகன் விவேக் உட்பட மற்றவர்களிடம் வாங்கிய அணைத்து கடன்களையும் அடைத்து விட்டதாகவும்,

பின் பொருளாதாரத்தில் ஒரு அளவு தன்னை நிலை நிறுத்தி கொண்ட தனுஷ், மாமனார் ரஜினிகாந்த் அறிவுறுத்தலின் படி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார். மேலும் தற்போது தனுஷ் போயஸ் கார்டனில் கட்டி வரும் மிக பிரமாண்ட வீடு கட்டுவதர்க்கு மாமனார் ரஜினிகாந்த் தான் பணம் உதவி செய்து வருவதாகும், தனுஷ் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தால் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார்கள், மாமனாரால் தப்பித்தார் தனுஷ் ஆனால் அவருக்கு எப்படி ரஜினிகாந்த் மகளுக்கு துரோகம் செய்துவிட்டு அவரை விட்டு பிரிவதற்கு மனம் வந்தது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.