அண்ணாமலைகாகா கோஷம் போட்டவர்கள் யார்… டெல்லிக்கு சென்ற ரிப்போர்ட்… ஆக்சனில் இறங்கிய அமித்ஷா…

0
Follow on Google News

பாஜக தலைவர் பதவி காலம் என்பது மூன்று வருடம் தான் என்பது அந்த கட்சியின் விதிகள், இந்நிலையில் அண்ணாமலை வகித்து வந்த மாநில தலைவர் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து, பாஜகவின் விதிகளின் படி மாநில தலைவர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். நயினார் புதிய மாநில தலைவராக நியமிக்கபட்ட பின்பு எந்த ஒரு இடத்திலும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை விட்டு கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்சா கலந்து கொண்ட மதுரையில் நடந்த நிகழ்வில், கூட ஓரமாக நின்று கொண்டிருந்த அண்ணாமலையில் கையை பிடித்து இழுத்து வந்து அமித்ஷா அருகில் நிற்க வைத்தார் நயினார். அந்த அளவுக்கு அண்ணாமலை மாநில தலைவராக இருந்த போது என்ன முக்கியத்துவம் கிடைக்குமோ, அதே முக்கியத்துவத்தை அண்ணாமலைக்கு நயினார் எந்த குறையும் இல்லாமல் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தற்பொழுது மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இருவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், நடந்த ஒரு சம்பவம் தான் இந்தியா முளுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பதற்கு முன்பு, பேசிய ஒவ்வொரு பாஜக தலைவர்கள் அடுத்து இந்த நிகழ்வுக்கு வர இருக்கும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை என்று அண்ணாமலை பெயரை உச்சரிக்கும் போதே, அண்ணாமலை மேடையில் இல்லை என்றாலும் அங்கே இருந்த நிர்வாகிகள் விசில் அடித்து துண்டை சுற்றி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் அண்ணாமலை மேடைக்கு வந்ததும் கட்சி நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்சா மேடைக்கு வந்தது, அண்ணாமலை தன்னுடைய உரையை முடித்தார், இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசும் போது அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும், துண்டை சுழற்றி விசில் அடித்து கட்சி நிர்வாகிகள் ஆரவாரம் செய்ததை பார்த்த மத்திய அமைச்சர் அமித்ஷா புன்னகைத்து பார்த்தார்.

இந்த நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது, வட இந்திய ஊடகங்கள் , தமிழகத்தில் அண்ணாமலைக்கு இருக்கும் வரவேற்பு குறித்து செய்திகள் வெளியிட்டது. இந்நிலையில் வழக்கம் போல் அண்ணாமலை மீது வன்மத்தை கொட்டும் ஒரு தரப்பினர், இது அண்ணாமலை செட்டப் செய்து கூட்டி வந்த கூட்டம், அதனால் தான் அண்ணாமலை பெயரை சொன்னதும் கரம் கோசம் எழுப்புகிறார்கள்.

மேலும் கர கோசம் எழுப்பியவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் இல்லை, கோவையில் இருந்து அண்ணாமலை இறக்கி விட்ட ஆட்கள் என்றெல்லாம் வன்மத்தை கக்கி வந்தது ஒரு தரப்பினர். இந்நிலையில் மதுரை நிகழ்வு முடிந்தது அமித்ஷாவுக்கு சென்ற ரிப்போர்ட்டில், மதுரையில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் உள்ளே செல்வதற்கு முன்பு, பாஜக தரவு மேலாண்மை பிரிவை சேர்ந்தவர்கள் விவரங்களை பெற்று என்ட்ரி போட்டு தான் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த விவரங்கள் அடிப்படையில் கட்சியில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் தான், இதில் யாரும் செட்டப் செய்து அழைத்து வரவில்லை, இயல்பாகவே கட்சி நிர்வாகிகள் மனதில் ஆழமாக குடி இருக்கிறார் அண்ணாமலை என்கிற ரிப்போர்ட் அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது. இருந்தும் மதுரை வருவதற்கு முன்பே அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுத்து தமிழக அரசியலில் களம் இறக்க அமித்ஷா முடிவு செய்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here