கடந்த சில மாதங்களாகவே முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான உரசல் மிக பெரிய அளவில் நடந்து வருவதாக பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுவில் தனக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதற்காகவே துணை முதல்வர் ஓய்வில் இருக்கிறார் என்று அறிக்கை வெளியானது.
இது தன்னுடைய தந்தை மீதான கோபத்தை துணை முதல் அமைச்சர் உதயநிதி வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இல்ல விழாவில் முதல்வர் மு க ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனித்தனியாக வருகை தந்து கலந்து கொண்டார்கள். பொதுவாகவே பல பொது நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக இணைந்து கலந்து கொள்வார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் கலைப்புலி தானு இல்ல விழாவில் முதல்வரும் துணை முதல்வரும் தனித்தனியாக கலந்து கொண்டது, இன்னும் இவர்கள் இருவருக்கும் இடையில் உரசல் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி க்கு பொறுமை இல்லை என்றும், கட்சிக்குள் வந்து மிகக் குறுகிய காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என சுமார் மூன்று வருடங்களுக்குள் அடுத்தடுத்து உயர் பதவிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் கட்சியிலேயும் துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் செயல் தலைவர் என்று மிக விரைவிலே உயரத்துக்கு செல்ல வேண்டும் என்கின்ற ஆர்வம் உதயநிதிக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மீது முழு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களை அரவணைத்து செல்ல கூடிய தன்மை, கட்சி கட்டமைப்பை புரிந்து கொள்ளும் தன்மையும் இன்னும் முழுமையாக உதயநிதி ஸ்டாலினுக்கு வரவில்லை என்று நம்பும் முதல்வர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் என மூத்த தலைவர்கள் வகிக்கும் பதவிக்கு, உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்தால் நிச்சயம் மூத்த தலைவர்களின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை நன்கு அறிந்த முதல்வர் மு க ஸ்டாலின்.
அதே நேரத்தில் சம 0 அதே நேரத்தில் மேடையில் பக்குவமாக பேசக்கூடிய அளவிற்கு கூட உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய மகனுக்கு இன்னும் பக்குவமும் புரிதலும் வரவேண்டும் அதுவரை உயர் பதவிக்காக காத்திருக்கட்டும் என்று முதல்வர் உறுதியாக இருப்பதால், தந்தை மீது கடும் அப்சட்டில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தை மிக சரியாக கனிமொழி ஒரு பக்கம் செய்து வந்தாலும், தற்பொழுது உதயநிதியை விட கனிமொழிக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவும் பெருகி வருவதால் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக அன்புமணிக்கும் அவருடைய தந்தை ராமதாசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை வீதிக்கு வந்தது.
அது போன்ற ஒரு நிகழ்வு மு க ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் நடைபெறுமா என்று கேள்வி எழுந்து வரும் நிலையில், அந்த அளவிற்கு நடக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தந்தையை எதிர்த்து அன்புமணி போன்ற அரசியல் செய்வதற்கான துணிவு அவரிடம் இல்லை என்று, இன்றும் தன்னுடைய தந்தையிடம் அடம் பிடித்து தான் ஒரு பொறுப்பை வாங்க கூடிய அளவில் அவர் இருக்கிறார், அதிகாரம் செய்து தந்தையிடம் பொறுப்பு வாங்க கூடிய நபர் உதயநிதி இல்லை என்று கூறப்படுகிறது