அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி நீதிமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் ராஜினாமா செய்துள்ள செந்தில் பாலாஜி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்கின்ற சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்கின்ற வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது நீதிபதி ஓக்கா பெஞ்ச்
அந்த வகையில் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓட்கா இருக்கும் வரை செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதில் தொடர்ந்து சிக்கல் தான் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த வழக்கு குறித்து மேலும் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்தால் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஓட்கா பெஞ்சுக்கு தான் விசாரணைக்கு வரும் என்கிறார்கள்.

அந்த வகையில் மீண்டும் நீதிபதி ஓட்கா பெஞ்சுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் செந்தில் பாலாஜிக்கு தான் சிக்கலை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த நிலையில் 65 வயதாகவும் நீதிபதி ஓட்கா அவர்கள் மே 25ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிபதி ஓட்கா ஓய்வு பெற்றுவிட்டார் என்றால் புது பெஞ்ச் நியமிக்கப்படுவார்கள். அடுத்து வரும் வழக்குகளை அந்த புது பென்ச் தான் விசாரணை நடத்தும்.
அந்த வகையில் இனி வரும் காலகட்டங்களில் புது பெஞ்ச் வந்ததும் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ய ப்பட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ஆனால் அவருடைய வழக்கை எப்போது விசாரித்து முடிப்பீர்கள் என அமலாக்க துறையிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும் அமலாக்கத்துறை இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த வழக்கை அமலாக்கத்துறையால் விரைந்து முடிக்கப்படவில்லை என்றால் நான் மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் விதிக்க க்கூடாது என நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், மேலும் இந்தியா முழுவதும் மாநில அமைச்சர்கள் உட்பட பலரும் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு மட்டும் ஏன் அமைச்சராக தொடர விதிவிலக்கு நீதிமன்றம் அளித்துள்ளது என்கின்ற கேள்வியையும் தன்னுடைய மனுவில் செந்தில் பாலாஜி தரப்பு சுட்டிக்காட்டி அதே போன்று தன்னையும் அமைச்சராக பெறுபேற்க எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஏன் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறு கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தானே அமைச்சராக தொடரும் பட்சத்தில், எந்த சாட்சிகளையும் மிரட்ட மாட்டோம், மேலும் பிரமாண பத்திரம் கூட தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம், அதாவது பிராமண பாத்திரத்தில் சில உறுதி மொழியை செந்தில் பாலாஜி கொடுத்து, அந்த உறுதிமொழியை மீறும் பட்சத்தில் நீதிமன்றம் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்று கொள்கிறேன் என பிராமண பத்திரம் கூட தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் என செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி ஓட்கா ஓய்வு பெற்றதும் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சராக தொடர கூடாது என நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க வில்லை, இருந்தாலும் அமைச்சராக தொடர்ந்தால் பெயில் ரத்தாகி விடும் என்கிற அச்சத்தில் தான் செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த வகையில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் அடுத்த ஓரிரு மாதங்களில் செய்ய இருப்பதால் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராகிறதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.