தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு பாஜக மாநில தலைவர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக பாஜக உட்பட அணைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அதிமுக உடன் கூட்டணியை அமைத்தது பாஜக தலைமை.
அதே நேரத்தில் அதிமுக – திமுக இரண்டு கட்சிக்கு மாற்று சக்தியாக பாஜகவை தமிழகத்தில் உருவெடுக்க வைத்த பாஜக தலைவர் அண்ணாமலை, நான் பாஜகவை தமிழக்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தான் வேலை செய்து வருகிறேன், எதோ ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க நான் ஏன் பாஜக மாநில தலைவராக இருக்க வேண்டும் என பாஜக தலைவராக இருந்த போது வெளிப்படையாக பேசி வந்தவர் அண்ணாமலை.

குறிப்பாக திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுக்கு எதிராக அண்ணாமலை பேசி வந்தது, திமுகவுக்கு எதிரான வாக்குகளும் பாஜக பக்கம் வந்தது, இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாக்குகளும் பாஜகவை நோக்கி வர தொடங்கியது. இதனை தொடர்ந்து அதிமுக – திமுகவுக்கு போட்டியாக தமிழக அரசியல் வரலாற்றில் மூன்றாவதாக ஒரு கூட்டணி அமைத்து சுமார் 18 சதவிகித வாக்குகள் வாங்கியது என்றால் அது கடந்த 2024 பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது தான்.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து பாஜக நோட்டா கட்சி, எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர் பெற்றது என்றெல்லாம் பேசி வந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக இதே நிலை தொடர்ந்தால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக என்கிற ஒரு கட்சியே இல்லமால் சென்று விடும் என்கிற ஒரு சூழல் உருவாகி விடும் என்பதால், அதிமுக உள்ளே உட்கட்சி பூசல் வெடிக்க டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வர சம்மதம் தெரிவித்து வந்தார்.
இதனை தொடர்ந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜக அதிமுக கூட்டணி அவசியம் என கருதிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார், மேலும் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விட கூடாது, கூட்டணி சுமுகமாக இருக்க வேண்டும் என்றால் நயினார் நாகேந்திரன் தான் சரியான நபர் என அவரையே தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக தலைமை.
இந்நிலையில் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்துக்கு முக்கிய தகவல் உளவு துறை மூலம் சென்று இருக்கிறது. அதில் எப்படி இந்தியாவில் பல இடங்களில் பாஜகவை மோடி கட்சி என்று மக்கள் பேசுகிறார்களோ, அதே போன்று தான் தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவை அண்ணாமலை கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
மேலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் திமுகவுக்கு எதிரான பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிக தீவிரமாக இருக்க வேண்டும், ஆனால் சமீப காலமாக அண்ணாமலையின் அமைதி, திமுகவுக்கு எதிரான அரசியலும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இல்லை. திமுகவை வீழ்த்த எத்தனை எதிர்கட்சிகளுடம் கைகோர்த்து வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்தித்தாலும் அண்ணாமலை அமைதியாக இருக்க இருக்க திமுகவுக்கு சாதகமான சூழல் தான் உருவாகும், திமுகவை வீழ்த்த கூடிய முக்கிய சக்தி அண்ணாமலையை களத்தில் இறங்கிவிட்டால் மட்டும் தான் உண்டு என்கிற உளவு துறை ரிப்போர்ட் அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது.
இதன் பின்பு சமீபத்தில் நடந்த அமித்சா வீட்டில் பாஜக மூத்த தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுத்து தமிழக அரசியலில் மீண்டும் பழைய அண்ணாமலையாக இறங்கி விட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.