டாஸ்மாக் மெகா ஊழல் தொடர்பாக ஆளும் தரப்பை, குறிப்பாக முதல் குடும்பத்தை அமலாக்கத்துறை குறி வைத்து சுற்றி வளைத்து வரும் இந்த சூழலில், சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலினின் டெல்லி பயணம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. குறிப்பாக டாஸ்மாக் ஊழலின் தன்னுடைய மகனை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடியை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை முன் வைத்தனர்.
அதற்கு ஏற்றார் போல் முதல்வர் மு க ஸ்டாலினின் டெல்லி பயணத்தில், பிரதமருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் மு க ஸ்டாலினுக்கு முன் வரிசையில் முக்கியத்துவம், இதையெல்லாம் வைத்து பாஜக திமுகவுடன் சமாதானம் ஆகிவிட்டது என்றெல்லாம் கருத்துக்கள் வெளியானது. இது குறித்து டெல்லி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அரசியல் வேறு, அரசாங்கம் வேறு, அதைத்தான் பிரதமர் மோடி சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு என்ன மரியாதையும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் அவருக்கு டெல்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன் வரிசையில் கொடுத்து முக்கியத்துவம் வழங்கினார்.

அதே நேரத்தில் டாஸ்மாக் தொடர்பான சமாதான முயற்சி முற்றிலும் தோல்வியை தழுவி விட்டதாகவும், பிரதமர் மோடி அதற்கு துளி அளவும் சமரசம் செய்து கொள்வதற்கு வாய்ப்பை வழங்கவில்லை என்கின்றன டெல்லி வட்டாரங்கள். குறிப்பாக டாஸ்மாக் ஊழலில் சிக்கியுள்ள உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜுஜூ ஆகியோரை தூக்கி உள்ளே வைப்பதற்கான வேலைகளில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது அமலாக்கத்துறை அடுத்த கட்ட விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் 84 பக்கத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் அபிடபில் தாக்கல் செய்வதற்கான மனுவை தயார் செய்து வைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.
அதாவது அமலாக்க துறையில் லீகல் செல் என்று ஒரு பிரிவு உள்ளது. அதில் ஐந்து முக்கிய வழக்கறிஞர்கள் இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக நடத்திய விசாரணையில் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் இதில் தொடர்புடைய ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜுஜூ மற்றும் அவர் பின்னால் இருந்து இயக்கக்கூடிய முதல் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் பெயரையும் அந்த 84 பக்கம் அபிடபில் அமலாக்கத்துறை லீகல்செல்லைச் சார்ந்த வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஜூன் மாதம் இந்த அபிடபிளை சஉச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது. ஆனால் அதற்கு முன்பே அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் கைது செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது வரும் ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திமுக தரப்பில் தமிழகத்தில் கொண்டாட இருக்கிறார்கள். இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு முன்பே இந்த டாஸ்மாக் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள அந்த முக்கிய புள்ளியை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத்துறை மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது.
அந்த வகையில் அடுத்த ஐந்து நாட்களுக்குள் முக்கிய புள்ளி ஒருவர் இந்த டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கின்ற பரபரப்பு நீடித்து வருவது குறிப்பிடதக்கது.