உதயநிதி கதவை தட்டும் அமலாக்கதுறை… உச்சக்கட்ட கோபத்தில் பிரதமர் மோடி…

0
Follow on Google News

கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடி என்று சொல்வது போன்று திமுகவிற்கு எல்லா திசைகளிலும் இருந்து ஆபத்து சுற்றி வளைத்து நிற்கிறது. கடந்த முறை பிரதமர் மோடி இராமேஸ்வரத்திற்கு பாம்பன் பாலம் திறக்க தமிழகம் வந்த போது முதலமைச்சர். மு க ஸ்டாலின் அந்த நிகழ்வுக்கு நேரில் செல்லவில்லை, இது பிரதமருக்கு ஒரு வித கோபத்தை ஏற்படுத்தி இருந்ததாக அப்போது கூறப்பட்டது.

பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயணத்திற்கு பின்பே டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்க துறை சோதனையை தீவிர படுத்தியது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனையில், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நட்பு வட்டாரங்களான ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூஜூ ஆகியோரை கையில் ஆதாரத்துடன் நெருங்கிவிட்ட அமலாக்க துறை.

எந்த நேரமும் விக்ரம் பாஸ்கர், ரத்தீஷ் விக்ரம் ஜூ ஜூ இவர்கள் மூவரும் அமலாக்க துறையால் கைது செய்யப்படலாம் என்கின்ற பரபரப்பு நீடித்து வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க திமுகவின் மூத்த அமைச்சர்களான பொன்முடி ,துரைமுருகன், கே என் நேரு ஆகியோரின் வழக்குகளை அமலாக்கத்துறை துரிதப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சோதனை மற்றும் விசாரணையும் அமலாக்கத்துறை நடத்தக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்று அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழியர்களையும் டாஸ்மாக் நிறுவனங்களிலும் சோதனை மற்றும் விசாரணை நடத்த இடைக்கால தடையை பெற்றிருக்கிறது டாஸ்மாக் நிறுவனம்.

இது அமலாக்கத்துறைக்கு மிகப்பெரிய சவாலாகவும் கௌரவ குறைச்சலாக அமைந்துள்ளது. மேலும் மாநில சுயாட்சி என்கின்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு, முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, இந்திக்கு எதிர்ப்பு என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக திமுக செயல் படுகிறது என்கின்ற கோபம் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இருந்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது.

இந்நிலையில் மத்திய பாஜகவுக்கு தற்பொழுது தலைவலியாகவும், மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது திமுக. இதற்காகவே மீண்டும் திமுக எந்த ஒரு காரணத்திற்காகவும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து விடக்கூடாது, அதற்காக நாம் திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் தான் திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகளை தோண்டி ஒரு பக்கம் அமலாக்கத்துறை துரிதப்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் மெகா ஊழலில் சிக்கியுள்ள உதயநிதி நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர் , ரத்தீஷ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரை தட்டி தூங்குவதும் மட்டுமில்லாமல், வலுவான ஆதாரங்களுடன் உதயநிதி வீட்டு கதவை தட்டவும் தயாராகவே அமலாக்க துறை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மாநில சுயாட்சி என்கின்ற பெயரில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு, என பல விஷயங்களில் மத்திய பாஜகவுக்கு, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு மிக பெரிய அளவில் குடைச்சல் கொடுத்து வரும் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் உறுதியாக இருப்பதால், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சமரசத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் அமித்சா மற்றும் மோடி இருவரின் டார்கெட் உதயநிதி தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here