டாஸ்மாக் மெகா ஊழலில் யாருமே எதிர்பாராத விதமாக இதுவரை கேள்விப்படாத பெயராக, ரத்தீஷ் ,விக்ரம் ஜுஜு, ஆகாஷ் பாஸ்கர் ஆகிய மூன்று பெயர்கள் டாஸ்மாக் மெகா ஊழலில் சிக்கி இருப்பது, மேலும் இவர்கள் குறித்த வெளியாகும் பின்னணி தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின் போது, டாஸ்மாக் உயர் அதிகாரிகளான, விசாகன், சங்கீதா, ஜோதி ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பல தகவல்களை ஆதாரமாக பெற்று அதை ரெக்கார்டும் செய்தது அமலாக்கத்துற.
மேலும் அவர்களுடைய கை தொலைபேசி, இரண்டு லேப்டாப், மற்றும் டாஸ்மாக் அலுவலகங்கள் இருந்த கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் என அனைத்தையுமே அமலாக்கத்துறை கைப்பற்றியது. மேலும் டாஸ்மாக் அதிகாரிகள் பயன்படுத்திய ஜிமெயில்களையும் பாஸ்வேர்டுடன் அமலாக்கத்துடன் அதிகாரிகள் பெற்று சென்றனர்.

இதில் ஒரு வேலை டாஸ்மாக் அதிகாரிகள் gmail-ல் இருக்கும் தகவல்களை அளித்திருந்தால் அது ரீசைக்கிள் செல்லும், ரீ சைக்கிள்களும் அளித்திருந்தால் அது டெம்ப்ட் க்கு செல்லும், ஆனால் சாதாரணமாக இப்படி அழிக்கப்பட்ட மெசேஜ்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அமலாக்கத்துறை கைவசம் இருக்கும் சாப்ட்வேர்கள் மூலம், பழைய மெசேஜ்களை அளித்திருந்தாலும் அதை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக டாஸ்மாக் உயர் அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஜிமெயில் மூலமும் ஹார்ட் டிஸ்க் மூலமும் சுமார் 75 சதவீத டேட்டாக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு விட்டது என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்போது விசாகன் வீட்டில் டாஸ்மா உயர் அதிகாரி விசாகன் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்து விட்டார்கள் என்று தெரிந்ததுமே, ஆகாஷ் பாஸ்கர் மற்றும் ரத்தீஷ் இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள்.
இதில் ஆகாஷ் பாஸ்கர் சினிமாவில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய இருப்பது, இவருக்கு எங்கிருந்து இந்த ஆயிரம் கோடி ரூபாய் பணம் வந்தது என்கின்ற டேட்டாவும் அமலாக்கத்துறை கைவசம் இருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதிதாக யாரையும் அழைத்து விசாரிக்க கூடாது என்று தான் இடை தடை விதித்திருக்கிறார்களே, தவிர ஏற்கனவே விசாரித்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அந்த வகையில் இனிமேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரையும் புதிதாக விசாரித்து புதிய தகவல்களை சேகரிக்க வேண்டியது அவசியம் இல்லை, ஏற்கனவே அவர்களுக்கு போதுமான தகவல்கள் வந்துவிட்டது என்றும், இருக்கும் தகவலின் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ் ஆகியோருடன் கேள்விகள் எழுப்பப்பட்டு அதை உறுதி செய்து, அவர்கள் மூலம் வாக்குமூலம் வாங்குவது மட்டுமே அமலாக்க துறையின் வேலையாக இருக்கிறது.
மேலும் இந்த டாஸ்மாக் ஊழல் பண்ணும் செந்தில் பாலாஜி கைக்கு செல்லவில்லை என்றும் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ஜூ ஜூ ஆகியோர் மூலம் முதல் குடும்பத்திற்கு தான் சென்றுள்ளது என்கின்ற தகவலும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அமலாக்க துறையின் முதல் குடும்பத்தை நோக்கி விசாரணைக்கும் கைது நடவடிக்கும் செல்ல வேண்டுமென்றால் ஆகாஷ் பாஸ்கரும், ரத்தீஷிடமும் விசாரணை நடத்த வேண்டியது மட்டும் தான் அமலாக்க துறையின் வேலையாக உள்ளது என கூறப்படுகிறது .