அண்ணாமலைக்கு எதிராக நடந்த சதி… அமித்ஷாவுக்கு சென்ற ரிப்போர்ட்… வியூகத்தை மாற்றும் அமித்ஷா…

0
Follow on Google News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் மதுரை வந்து சென்றார், அமித்சா மதுரை வருவதற்கு முன்பு இருந்த அரசியல் நிலவரம் வேறு அமித்ஷா மதுரைக்கு வந்து சென்ற பின்பு இருக்கும் அரசியல் களநிலவரம் வேறு என்று சொல்லும் அளவுக்கு தலைகீழாக மாறியுள்ளது தமிழக அரசியல் களம். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்ட பின்பு, தமிழகத்தில் ஒரு சிலர் பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் என்கிற பெயரில் அண்ணாமலைக்கு எதிராக ஒரு நேரேட்டிவ் செட் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.

டெல்லி பாஜக தலைமை அண்ணாமலையை ஓரம் கட்டி விட்டது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறார், இதில் உச்சகட்டமாக திமுகவிடம் பணம் பெற்று கொண்டு அண்ணாமலை வேலை செய்த விஷயம் அமித்ஷா கவனத்துக்கு சென்று விட்டது அதனால் தான் அண்ணாமலை ஓரம் கட்டப்பட்டார் என்றெல்லாம் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஒரு நேரடிவ் செட் செய்யும் வேளையில் ஒரு சிலர் பத்திரிகையாளர் என்கிற போர்வையில் செய்து வந்தனர்.

இவர்களின் நோக்கம் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் அண்ணாமலை செல்வாக்கை சரிய செய்ய வேண்டும், அதற்காக அண்ணாமலைக்கு எதிராக இது போன்ற ஒரு நேரடிவ் செட் செய்வதே இவர்கள் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால் இவர்கள் பின்னணியில் யார் என்கிற விவாதம் அனல் பறந்து வந்தது. இப்படி ஒரு சுழலில் அமித்ஷா மதுரைக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவர் பற்றி தனி தனியாக சர்வே எடுக்கவும் , மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் சர்வே எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்ட சர்வே ரிப்போர்ட் மத்திய உள்துறை அமைச்சர் கவனத்துக்கு சென்று இருக்கிறது. அதில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி எதிர்பார்த்தது போன்று கூட்டணி காட்சிகளை அரவணைத்தும், கட்சி நிர்வாகிகளையும் அரவணைத்து, எந்த ஒரு இடத்திலும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை மிஸ் செய்யாமல் நடந்து கொள்கிறார் என்கிற நல்ல ரிப்போர்ட் நயினார் குறித்து அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழக அரசியலில் அண்ணாமலையை தவிர்த்து பாஜக அரசியல் செய்தால் அது மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இருக்காது, அண்ணாமலை பாஜகவில் பொறுப்பில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவருக்கான செல்வாக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எந்த விதத்திலும் குறையவில்லை, குறிப்பாக அண்ணாமலைக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்து இருக்கிறது என்கிற ரிபோர்ட் அமித்ஷா கைக்கு சென்று இருக்கிறது.

அதே நேரத்தில் சில பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் அண்ணாமலைக்கு எதிராக நேரடிவ் செட் செய்ய கூடியவர்கள் பின்னணியில் யார் என்கிற தகவலும் மத்திய உள்துறை அமித்ஷா கவனத்துக்கு சென்று இருக்கிறது. இதனை தொடர்ந்து மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பே அண்ணாமலையிடம் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் அமித்ஷா.

மேலும் மேடையில் அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த முக்கியத்துவம் அதுவரை அண்ணாமலையை டெல்லி ஓரம் கட்டி விட்டது என பேசி வந்தவர்களுக்கு சம்மட்டி அடியாக அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது பாஜகவுக்கு மட்டுமில்லை, அதிமுகவுக்கு அமித்ஷா தரப்பில் இருந்து ஒரு முக்கிய தகவல் சென்று இருக்கிறது. அதில் எந்த ஒரு காரணத்திற்காகவும் அண்ணாமலையை பாஜக புறக்கணிக்காது தொடர்ந்து அவரை முன்னிறுத்தி தான் பாஜக அரசியல் செய்யும் என்கிற தகவல் மதுரையில் இருந்து டெல்லி திரும்பிய பின்பு டெல்லியில் இருந்து அமித்ஷா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here