மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்து சென்ற நிகழ்வு தமிழக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனி விமானம் மூலம் கடந்த ஜூன் 7ம் தேதி மதுரை விமானம் நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து மதுரை GTR ஓட்டலில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு நிகழ்வில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இடம்பெற வில்லை, மற்ற மூத்த தலைவர்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அண்ணாமலை இடம் பெறாமல் இருந்தது பல விவாதங்களை ஏற்படுத்தியது. ஏற்கனவே அண்ணாமலை இமேஜை மக்கள் மத்தியிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் டேமேஜ் செய்யும் வேலையை முழு நேரமும் செய்து வரும் ஒரு தரப்பினர், டெல்லி பாஜக தலைமை அண்ணாமலையை ஓரம் காட்டிவிட்டது என்கிற பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

இப்படி ஒரு சுழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு நிகழ்வில் அண்ணாமலை இடம் பெறாமல் இருந்தது, தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றவர்களுக்கு குதூகலத்தை கொடுத்தது, ஆனால் அந்த குதூகலம் சில நேரம் கூட நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியிருந்த GRT ஓட்டலுக்கு வந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார் அண்ணாமலை.
இதனை தொடர்ந்து அண்ணாமலையை நேரில் அழைத்து அமித்ஷா கண்டித்தார் என்று வழக்கம் போல் அண்ணாமலைக்கு எதிராக வன்மத்தை கக்கி வரும் ஒரு சிலர் பொய்யான செய்தியை பரப்பி வந்தனர், அதுவும் சில மணி நேரம் கூட நீடிக்க வில்லை, காரணம் மதுரையில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில் அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த முக்கியத்துவம், குறிப்பாக அமித்ஷா மேடையில் பேசும் போதும் அண்ணாமலை பெயரை சொன்னதும், விண்ணை பிளக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் விசில் அடித்து ஆரவாரம் செய்து கொண்டாடியதை புன்னகைத்து மகிழ்ந்தார் அமித்ஷா.
இந்நிலையில் தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்த ஆரவாரம், இது அமித்ஷா ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக அரசியலில் ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் இருவருடைய அரசியல் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிவர் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூக மக்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலானோர், ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அந்த கட்சியில் நடந்த உட்கட்சி மோதலால், அதிமுகவை ஆதரித்த அதே மக்கள் வெறுக்க தொடங்கினார்கள். இப்படி ஒரு சூழலில், முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் அரசியல் முக்குலத்தோர் சமூக மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து.
இதனை தொடர்ந்து எம்ஜிஆர் , ஜெயலலிதாவுக்கு பிறகு தென்மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் ஏற்று கொண்ட ஒரு அரசியல் தலைவராக அண்ணாமலை இடம்பெற்றுள்ள ரிப்போர்ட் அமித்சா கவனத்துக்கு ஏற்கனவே சென்று இருக்கிறது. அந்த வகையில் தான் தென் மாவட்டங்களின் தலைநகரான மதுரையில் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பு என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்பார்த்த ஒன்று தான் என கூறப்படுகிறது.
மேலும் GRT ஓட்டலில் நடந்த அமித்சா – அண்ணாமலை சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தது என்றும், சில முக்கிய அசைன்மென்ட் அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.