திமுகவுக்கு அமித்ஷா சவால்… ஆட்சி மாற்றத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்…

0
Follow on Google News

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவுக்கு சவால் விடும் வகையில் சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தார். பொதுவாகவே அமித்ஷா சவால் விட்டு சம்பவம் செய்வதில் அவர் அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும்.

இதில் அமித்ஷா – மோடி இருவரும் இணைந்து ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றும் நினைத்து விட்டார்கள் என்றால், அதை செய்து வெற்றியடைந்தார்கள் என்பது தான் இவர்கள் அரசியல் வரலாற்றில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும். அப்படி டெல்லியில் 27 வருடங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுத்து அவருடைய ஆட்சியை வீழ்த்தி பாஜகவை டெல்லியில் அரியணையில் அமர்த்தியவர்கள் அமித்ஷா வும் மோடியும்.

தெலுங்கானாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்த கே சி ஆர் இன்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு பாஜக அசுர வளர்ச்சி அங்கே அடைந்திருக்கிறது. அதேபோன்று பல மாநிலங்களில் சவால் விட்டு சம்பவம் செய்து வருகிறவர் அமித்ஷா. தற்பொழுது அமித்ஷா இரண்டு மாநிலங்களுக்கு சவால் விட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

அதில் ஒன்று மேற்கு வங்காளம் மற்றொன்று தமிழ்நாடு. அந்த வகையில் அமித்ஷாவின் முழு கவனமும் தற்போது மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. அதில் தமிழ்நாடு தான் அமித்ஷாவின் முதல் டார்கெட்டாக வைத்து களமிறங்கியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையிலான பாஜக தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் பாஜக மட்டும் 11 சதவீத வாக்குகளை தமிழ்நாட்டில் பெற்று இருந்தது.

இந்த நிலையில் அமித்ஷாவின் வியூகம் என்பது வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை திட்டவட்டமாக உறுதியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியப்படும் சூழலில் தான் தற்பொழுது தமிழக அரசியல் களமும் இருந்து வருகிறது. காரணம் ஜெயலலிதாவும் கருணாநிதியும் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான அவசியம் இல்லை.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் கருணாநிதி மறைவுக்குப் பின்பும் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே ஆளுமையில்லா தலைமையாக தவித்து வருகிறது. இதில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கூட்டணி பலத்துடன் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அடுத்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவால் தனித்து போட்டியிட்டு வீழ்த்துவது என்பது முடியாத காரியம், அந்த அளவுக்கு அதிமுக வலுவிழந்து காணப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் திமுகவும் கூட்டணி கட்சிகளின் துணை இன்றி மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது தான் தமிழக அரசியல் களத்தில் நிலவரம். அதன் வெளிப்பாடு தான் பாஜக தேமுதிக பாமக , விசிக காங்கிரஸ், விஜய் போன்ற அனைத்து கட்சிகளும் கூட்டணி ஆட்சி என்கின்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி தான் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி படுத்திவிட்டு சென்றுள்ளார்.

மேலும் தற்பொழுது திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர் கட்சிகள் தனி தனியாக போட்டியிட்டால் வீழ்த்த முடியாது, மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முறை இல்லை என்றாலும் அடுத்த முறை 2031ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது,ஆனால் அதிமுக அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்பதால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக சம்மதம் தெரிவித்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here