திட்டவட்டமாக மறுத்த அமித்ஷா… சோகத்துடன் டெல்லியில் இருந்து திரும்பிய எடப்பாடி…

0
Follow on Google News

இனிமேல் பாஜகவுடன் இப்போது கூட்டணி இல்லை, 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடையாது, இனி எப்போதும் கூட்டணி கிடையாது என வாய் இருக்கு என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம் என இதற்கு முன்பு பேசிய எடப்பாடி பழனிசாமி தற்பொழுது பாஜகவிடம் அடி மட்டத்துக்கு இறங்கி வந்து கொண்டிருப்பதை, அரசியலை நன்கு உற்று நோக்கி கவனித்து வருகின்றவர்கள் கணித்துள்ளார்கள்.

இப்படி எடப்பாடி பாஜகவிடம் அடிமட்டத்துக்கு இறங்கி வருவதற்கு காரணம், இனி அவரால் அரசியலில் ஒரு அடி கூட எடுத்து முன்னே வைக்க முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது, அப்படி அவர் கல் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் அரசியல் தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது.

சசிகலா காலில் தவழ்ந்து சென்று முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, தன்னை ஒரு ஜெயலலிதாவாக நினைந்து கொண்டு, சுற்றி இருக்கின்றவர்களில் யாரோ ஒருவர், நீங்க பெரிய ஆளுமை என எடப்பாடி பழனிசாமி ஆள் மனதில் பதிய வைத்ததை உண்மை என நம்பி, எடப்பாடி எடுத்து வைத்த அரசியல் நகர்வுகள், அவருடைய தலைமையின் கீழ் தொடர்ந்து சுமார் 10 தேர்தலை சந்தித்து, 10 முறையும் தோல்வியை சந்தித்து, 10 தோல்வி பழனிச்சாமி என்கிற பெயரையும் பெற்ற பெருமை எடப்பாடி பழனிசாமிக்கே சேரும்.

இந்த நிலையில் அதிமுக உள் விவரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் கொடுத்து உத்தரவின் பேரில் இரட்டை இலை சின்னம் 2026 தேர்தலுக்குள் முடங்கும் சூழல் உறவாகி உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர் கோடி தூக்கி வருவது அதிமுக மேலும் பல துண்டுகளாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் கூட்டணி வருவார் என எடப்பாடி எதிர்பார்த்தும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதில் தகவலும் எடப்பாடி க்கு வரவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தவித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேன்டுமானாலும் செய்வார் எடப்பாடி என்கிற விமர்சனம் அவர் மீது ஏற்கனவே இருந்து வரும் நிலையில், தற்பொழுது அழிவின் விளிம்பில் இருக்கும் தன்னுடைய அரசியல் வாழ்வை காப்பாற்றி கொள்ள பாஜகவுடன் இறங்கி வந்து விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

அந்த வகையில் நேரடியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் சரண்டராகி விடுவோம் என்கிற முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி. தீடிரென டெல்லி சென்றவர். அங்கே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின் போது என்ன நடந்தது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க தயார் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார். அதில் தன்னை முதல்வர் வேட்பாளராக கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து அறிவிக்க வேண்டும், இரண்டாவதாக இது சட்டசபை தேர்தல் என்பதால் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று இந்த கூட்டணியை அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அமித்ஷா விடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது தேசிய ஜனநாயக கூட்டணி தான், இந்த கூட்டணியை தலைமையை ஏற்று நடத்துதவது பாஜக தான் என்பதை மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்று கொண்டு விட்டனர், அதனால் இது தேசிய ஜனநாயக கூட்டணி என்பதில் மாற்றம் இல்லை, மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை தாங்கி வழிநடத்தும் பாஜக முடிவு செய்யும். என அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதையும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் ஏற்று கொள்ள அமித்சா மறுத்து விட்டதால் மிகுந்த ஏமாற்றத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here