இது என்ன சாப்பாடு .. நாய் கூட சாப்பிடாது ? ஜெயிலரிடம் திமிராக பேசி செம்ம டோஸ் வாங்கிய ஷாருகான் மகன்..

0
Follow on Google News

மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் போதை பொருள் உட்கொண்டு உல்லாசம் பார்ட்டியில் கலந்து கொண்டு போதை பொருளுடன் கையும் களவுமாக சிக்கினார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அயூப் கான், இதனையடுத்து கைது செய்யப்படட்ட ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் போலீசார் செய்தனர். இதனை தொடர்ந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு.

அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொன்டு வருவதால் இவர்களுக்கு போதை பொருள் எப்படி கிடைத்தது, மேலும் இவர்களுக்கும் போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் மிக பெரிய வாழக்கறிஞர் பலரை அணுகி லட்ச கணக்கில் அவர்களுக்கு பீஸ் கொடுத்தும் தனது மகனை வெளியில் கொண்டு வராமல் தவித்து வருகிறார் ஷாருக்கான்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது மகனுக்கு வீட்டில் இருந்து சமைத்து உணவு அனுப்ப பட்டது ஆனால் சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கேண்டீனில் உணவு வாங்கி சாப்பிட தனது மகனுக்கு ரூபாய் 4500 மணியாடர் செய்தார் ஷாருகான், அதிக பட்சம் சிறை விதியின் படி ரூபாய் 4500 மட்டுமே மணியடர் செய்ய முடியும். மேலும் கொரோனா தோற்று காரணமாக சிறை கைதிகளை பார்க்க அனுமதி கிடையாது.

இதனால் வீடியோ காலில் மட்டும் தான் பேச முடியும். ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் இருவரும் சிறையில் இருக்கும் தனது மகன் அயூப் கானிடம் பேசிய போது இங்கே படுக்க போதிய வசதியில்லை, தனி அறை கிடையாது, பலருடன் சேர்ந்து படுக்க வேண்டியிருக்கு, அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும், உணவு சரியில்லை வெறும் பிஸ்கெட் தண்ணீர் மட்டும் தான் அதிகம் சாப்பிடுகிறேன் என கதறி அழுதுள்ளார் அயூப் கான்.

இதனை தொடர்ந்து விரைவில் அப்பா உன்னை வெளியில் எடுத்து விடுகிறேன் என தெரிவித்து மகனை தைரியமாக இருக்க சொல்லியுள்ளார் ஷாருகான். இந்நிலையில் அதிகாலை மணிக்கு சிறையில் அனைவரும் எழுந்திருக்க வேண்டும் ஆனால் தொடர்ந்து அயூப்கான் தாமதமாக எழுந்திருக்க சிறை அதிகாரி அவரை எழுப்பிவிட்டு வந்துள்ளனர், அப்போதே சிறை அதிகாரிகளை முறைத்து பார்க்க தொடங்கியுள்ளார் அயூப்கான்.

இந்நிலையில் அயூப்கான் சிறையில் கொடுக்கப்படும் உணவு சரியில்லை என நீண்ட நேரம் சாப்பிடாமல் வைத்துள்ளார். அப்போது ஜெயிலர் தம்பி சாப்பிட்டுப்பா என தெரிவிக்க. இது என்ன உணவு மனிதன் சாப்பிடுவானா இதை, நாய் கூட இதை சாப்பிடாது, எனது அப்பா யார் தெரியுமா.? என்னை மற்ற கைதி போன்றே நடத்துகிறீர்கள் என அயூப்கான் மிரட்டும் வகையில் ஜெயிலரிடம் பேச. தம்பி நீ ஒரு குற்றவாளி உன்னை குற்றவாளி போன்று தான் நடந்த முடியும்.

இஷ்டம் இருந்தா சாப்பிடும் இல்லை உன் இஷ்டம், அதை விடுத்து இங்க சவுண்டு வேண்டாம் என செம்ம டோஸ் கொடுத்துள்ளார் ஜெயிலர். இந்நிலையில் இதற்கு முன்பு ஷாருகான் மகன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போது அப்போது ஷாருக்கான் கொடுத்த பேட்டி ஒன்று என்னுடைய மகன் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் இருக்கலாம் எந்தவித சந்தோஷத்தையும் அனுபவிக்கலாம் என கூறியதை தற்போது ரசிகர்கள் எடுத்து வைரலாகி ஒரு தந்தை பேசும் பேச்சா இது என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.