கணவன் கண்முன்னே கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! ஆக்க்ஷனில் இறங்கிய காவல்துறை

0
Follow on Google News

ஆந்திரா ; ஆந்திராவில் கடந்த இருமாதங்களில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் திருப்பதி அருகே ரயில்வே நிலையத்தில் ஒரு கர்பிணிப்பெண் கணவர் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட கொடுமை நடந்தேறியது. இந்நிலையில் விஜயநகரத்தில் 25 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

போலீசார் கூற்றுப்படி விஜயநகரம் அருகில் பாதிக்கப்பட்ட பெண் தனது இரு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அந்த பெண் அருகில் உள்ள தேநீர் கடையில் வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 2 அன்று முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் அந்த பெண்ணின் வீட்டருகே மது அருந்தியுள்ளனர்.

பின்னர் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். இரவு அங்கு உணவருந்திக்கொண்டிருந்த அந்த பெண்ணின் ஆண் நண்பரை சராமாரியாக தாக்கியுள்ளனர். அதையடுத்து முக்கிய குற்றவாளி அந்த பெண்ணை வேறு அறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்களிடமிருந்து தப்பித்த ஆண் நண்பர் வேறொரு பெண்ணிடம் உதவிகோரியுள்ளார். அந்த பெண் வருவதற்குள் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தப்பியோடிவிட்டனர். இருந்தபோதிலும் மீண்டும் திரும்பிவந்த நால்வரும் இரண்டாவதாக உதவிக்கு வந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளி முதல்பெண்ணை மீண்டும் இரண்டாவது முறையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தேநீர்க்கடை உரிமையாளரிடம் நடந்ததை கூறி உதவிகேட்கவே குற்றவாளிகள் மீண்டும் தப்பியோடியுள்ளனர். உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். முக்கிய குற்றவாளியை அன்று இரவே கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால் மற்ற மூவரும் தப்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்று அந்த மூவரையும் கைதுசெய்துவிட்டதாக திஷா காவல்நிலைய துணைக்காவல் கண்காணிப்பாளர் டி திரிநாத் தெரிவித்தார். ஏற்கனவே குடிபோதையில் மூன்றுபேர் கர்பிணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடந்திருக்கும் இந்த சம்பவம் மேலும் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.