தமிழக நகராட்சி, ஊராட்சி பிரதிநிதிகளின் முதல்வர் ஸ்டாலின் …… தமிழக டிஜிபியை நேரில் சந்தித்தபின் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் பேட்டி..!

0
Follow on Google News

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்து பின் விடுதலை செய்த விவகாரம் குறித்து தமிழக டிஜிபியை நேரில் சந்தித்த தமிழக பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் அதன் பின்பு அவர் அளித்த பேட்டியில். திமுகவின் போலியான புகாரின் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார், இதனை கண்டித்து பல இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய உள்துறை இனையமைச்சர் இது தொடர்பாக தமிழக டிஜிபி அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விளக்கம் கொடுக்க தமிழக டிஜிபி அவர்களை சந்தித்தோம். தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது திமுகவினர் போலியான போலீஸ் புகார் அளித்து வருகின்றனர். எந்த ஒரு முகாந்திரம் இல்லாமல் அரசியல் காரணமாக கைது நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் தமிழக டிஜிபி அவர்களிடம் தெரிவித்துளோம். அவரும் இது தொடர்பாக மாவட்ட காவல்த்துறைக்கு சுற்றறிக்கை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் CTR நிர்மல் குமார் பேசுகையில், திமுகவினர் இது போன்ற போலியாக புகார் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழகத்தின் ஊராட்சி மற்றும் நகராட்சி பிரதிநிதிகளின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இனி வரும் காலங்களில் போலி புகார்கள் மூலம் பாஜகவின் கருத்து சுதந்திரத்தை முடக்கி விடலாம் என செயல்படும் திமுகவினர் இது போன்று இனி செயல்பட வேண்டாம் என அவர்களின் தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இது போன்ற செயல்கள் மீண்டும் தொடரும் பட்சத்தில், தமிழக ஆளுநர் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்க இருக்கின்றோம். இது தொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜகவின் சமூக ஊடகம் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக விளங்கி வரும் நிலையில், திமுகவினர் செய்யும் தவறுகளை மறைக்க பாஜகவின் சமூக ஊடகத்தை முடக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்களின் நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது, திமுகவினர் கொடுக்கும் ஒவ்வொரு போலியான புகாருக்கும், பாஜகவின் வேகம் அதிகரிக்குமே தவிர முடக்கி விட முடியாது என தமிழக டிஜிபியை நேரில் சந்தித்த பின் தமிழக பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜகவினரை அச்சுறுத்தும் வகையில் திமுக மீண்டும் செயல்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.