பிரியாணி பிரியர்களே உஷார்..! பிரியாணி சாப்பிடவர் உயிரிழப்பு….சென்னை உணவகத்தில் நடந்த அதிரடி ஆய்வில் திடுக்கிடும் தகவல்..

0
Follow on Google News

உணவகங்களில் சாப்பிடும் ஆர்வம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் பிரியாணி கடைகள் சமீப காலமாக தமிழகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருப்பது தமிழகத்தில் பிரியாணி மீது உள்ள மோகம் மக்களுக்கு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. ஆனால் உணவகங்களில் உண்ணும் பிரியாணியில் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை ரயில் நிலையில் ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் வந்த நாய் இறைச்சி பிடிபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள சில உணவகங்களில் மட்டன் பிரியாணியில் அதிக லாபம் கிடைக்க ஆட்டு இறைச்சிக்கு பதில் நாய் இறைச்சி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்போது செய்திகள் வெளியாயின, இதனை தொடர்ந்து சென்னையில் பல்வேறு உணவகங்களில் அதிரடி சோதனை செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மட்டன் பிரியாணியில் தான் ஆட்டுக்கு பதில் நாய் இறைச்சி பயன் படுத்துறார்கள் என்றால் தற்போது சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிர் இழந்த நிலையில் 40க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகின்றது.

அந்த உணவகத்தில் சிக்கன் பிரியாணி உண்ட சிறுமி திடீரென உயிரிழந்தார். பிரியாணி சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்ட நிலையில் சுமார் 40 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரியாணி உண்ட சிறுமி உயிரிழந்த நிலையில், சுமார் 12க்கு மேற்பட்ட உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதில் உணவகங்களில் இருந்து கெட்டுப்போன சிக்கன்களை கிலோ கணக்கில் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் இது குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது, அதில் பெரும்பாலும் சிக்கன் பிரியாணியில் பயன்படுத்தப்படும் கோழிகள் பண்ணைகளில் சிக்கு வந்து மரண தருவாயில் இருக்கும் கோழிகள் குறைந்த விலையில் உணவக உரிமையாளர்கள் வாங்கி வந்து பயன்படுத்துவதாகவும். இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும்.

மேலும் இது போன்ற சிக்கன் பிரயாணிகளை சாப்பிடும் நபர்களுக்கு உடல்களில் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். பிரியாணி பிரியர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட விரும்பினால் நாட்டு கோழி பயன்படுத்தி வீட்டிலே சிக்கன் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் என அறிவுரை வழங்கும் மருத்துவர்கள். உங்கள் பணத்தை கொடுத்து கடைகளில் பிரியாணி சாப்பிட்டு உங்கள் உயிரை நீங்களே இழக்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.