இந்திய அணியில் தோனிக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கு… மற்ற யாருக்கும் இல்லை… ஆஸ்திரேலியா வீரர் ஹைடன் சொன்ன விஷயம்..

0
Follow on Google News

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்ற அணிகளை காட்டிலும் முடிசூடா அரசனாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அசால்டாக 5 உலகக் கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணிக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே திகழ்கிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போற்ற மற்ற இந்தியர்களை காட்டிலும் எம்.எஸ். தோனி மட்டுமே ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்படக்கூடிய தகுதியை கொண்டுள்ளதாக மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபிக் என ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார். தோனிக்கு பிறகு இந்தியா இன்னும் ஐசிசி பட்டத்தை வெல்லவில்லை.

கடந்த 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையில் 2010ஆம் ஆண்டு டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான மேத்யூ ஹைடன் தோனியின் பண்பு மற்றும் அவரது நட்சத்திர அந்தஸ்து மிகவும் பெரியது என்று கூறியுள்ளார்.

அவரைப் பற்றி ஸ்போர்ட்ஸ் விகடன் இணையத்தில் ஹைடன் பேசியதாவது, “ஆஸ்திரேலிய உடைமாற்றும் அறையில் தோனி எளிதாக உட்கார்ந்து அதை கேப்டன்ஷிப் செய்ய முடியும். ஏனெனில் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று நம்புகிறார். பைகளை சேகரித்து பந்துகளை வீசும் அவர் மிகவும் எளிமையானவர். அவர் அணியில் கடினமாக உழைக்கிறார். அவர் எப்போதும் எம்எஸ் தோனி தன்னை விளம்பரப்படுத்துபவர் அல்ல.

தாம் எந்தளவுக்கு மகத்தானவன் அல்லது தாம் என்ன சாதித்தேன் என்பதை தோனி மற்றவர்களிடம் சொல்லி நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதனாலேயே எம்.எஸ். தோனி துருப்புச்சீட்டாக இருக்கிறார். நீங்கள் ஆஸ்திரேலியாவையும் 25 மில்லியன் மக்களையும் பாருங்கள். அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக வென்றார்கள்? என்று கேட்பீர்கள். எம்எஸ் தோனி அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளார். சுய விளம்பரத்திற்காக அல்லாமல் ஈகோவை பற்றி எதுவும் இல்லாத வகையில் அவர் அதை செய்கிறார்.

சிறிய கிராமத்திலிருந்து வந்த அவர் இந்திய மக்கள் குறிப்பாக சென்னை மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் வழியை கண்டறிந்துள்ளார். எப்போதும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர கேப்டனாக தல இருப்பார். ஆனால் நாம் அனைவரும் சொல்வது போல் தோனி தம்மைப் பற்றிய எப்போதும் சொல்ல மாட்டார். அது தான் அவருடைய அழகாகும். அவர் எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதை அனைவரும் விரும்புகின்றனர்.

ஆகஸ்ட் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தாலும் 2021 மற்றும் 2023ல் இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது சென்னை அணியின் கோப்பை எண்ணிக்கையை ஐந்தாக கொண்டு சென்றுள்ளார். ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்களுக்குத் தகுதிபெறத் தவறிய பிறகு, தோனியின் எதிர்காலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் தோனி எப்போதும் தலைசிறந்த தலைவராக இருப்பார்.

தோனி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்து தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? மாட்டாரா? என்பது அவர் எடுக்கும் முடிவு. எங்களுக்கு அவர் விளையாட வேண்டும் என்று தான் ஆசை. தோனியின் எதிர்காலம் பற்றிய அனைத்து ஊகங்களையும் தோனி தான் நீக்க முடியும். இருப்பினும் அடுத்த ஆண்டு ஒரு இறுதி இன்னிங்சிற்காக தோனி மீண்டும் வருவார் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.