மீடியாக்கள் காட்ட மறுப்பதேன்?? அவரை செருப்பால துடப்பத்தால் அடிக்கிறோம்..! நடிகை ஆரத்தி ஆவேசம்…

0
Follow on Google News

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ‘சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அங்கேயே ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் நடத்தி வரும் பள்ளியை சேர்ந்த மாணவிகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொண்ட சிவசங்கர் பாபா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாலியல் புகார் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் நடிகை ஆரத்தி தெரிவித்ததாவது, தமிழக காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள் மன்னிக்கவும் அந்த எச்ச சாமியார இரண்டு நாள் பொது இடத்தில் நிக்க வையுங்கள் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த குழந்தைகள் ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் 9am- 5pm வரை செருப்பால துடப்பத்தால் அடிக்கிறோம்.. பிறகு உங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்றும்.

மேலும் பாடகியின் மகளை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய பாதிரியாரை மீடியாக்கள் காட்ட மறுப்பதேன்?? பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பிரித்துப் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுத்து விளம்பரப் படுத்துங்கள் இனிமே பார்ப்பவர்கள் காரித்துபனும் என தனது கோபத்தை நடிகை ஆரத்தி வெளிப்படுத்தியுள்ளார்.