பிரியங்கா கட்டுப்பாட்டில் விஜய்டிவி உயர் அதிகாரிகள்.. மணிமேகலைக்கு நடந்த அநீதி…

0
Follow on Google News

தற்பொழுது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் உச்சக்கட்ட மோதல் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்பு இந்த நிலையை அடைந்திருக்கிறார். காதல் திருமணம், வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை, இப்படி தனி ஒரு பெண்ணாக கடுமையாக போராடி இன்று அனைவரும் அறியும் வகையில் மிகப் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார் மணிமேகலை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இதுவரை மிக சிறப்பாக வழி நடத்தி வரும் மணிமேகலை, அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் தலையீடு அதிகமாக இருந்த காரணத்தினால், அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். குறிப்பாக தன்னுடைய தன்மானத்திற்கு ஒரு இலக்கு என்றால் அந்த நிகழ்ச்சியை தன்மானத்தை விட்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வெளியேறிய மணிமேகலையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

குறிப்பாகவே விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா தவிர்த்து அனைத்து நிகழ்ச்சியிலும் பிரியங்காவை தவிர்க்க முடியாமல் பார்க்கலாம். அதாவது ஒரு நிகழ்ச்சி வேறு ஏதாவது ஒரு தொகுப்பாளரை வைத்து ஆரம்பிக்கும் பொழுது மெல்ல வளர்ந்தது நிகழ்ச்சி பிரபலமானதும், பிரியங்கா தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த நிகழ்ச்சியை கைப்பற்றி விடுவார் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

அதாவது பிரியங்காவிற்கு விஜய் தொலைக்காட்சியில் உள்ள உயர் பதவியில் இருப்பவர்களிடம் மிக நெருக்கமான நட்பு இருந்து வருவதாகவும், அந்த வகையில் பிரியங்கா அவர்களை ஒரு வழியாக கன்வின்ஸ் செய்து தான் நினைத்ததை சாதித்து விடுவார் என கூறப்படுகிறது. ஆனால் எல்லா நிகழ்ச்சியிலும் நான்தான் என்று பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சியிலும் வாயை வைப்பதற்கு பதிலாக,

குறிப்பிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இன்னும் திறன் பட நடத்தலாம். ஆனால் இந்த வாய்ப்புக்காக போராடி ஒரு இடத்தை பிடிக்கின்றவர்களை, வாய்ப்பை தட்டி பறித்து எட்டி உதைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கின்ற விமர்சனம் பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியை நோக்கி எழுந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றவர் மணிமேகலை. இத்தனை சீசனாக தொகுத்து வழங்கியவர்கள் சமீபத்தில் நடந்த சீசனில் தான் அவருக்கு மிகப்பெரிய தன்மானத்தை சீண்டும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறிகிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்ற பிரியங்கா, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மணிமேகலையை மட்டம் தட்டும் வகையில் லீட் செய்ய தொடங்கியுள்ளார்.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட விஜய் டிவி அதிகாரிகளிடம் மணிமேகலை தெரிவித்தும் நீங்கள் பிரியங்காவை அட்ஜஸ்ட் செய்து போங்க என்று மணிமேகலைக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் விஜய் தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள். இதனை தொடர்ந்து நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து என்னுடைய தன்மானத்தை இழக்க நான் விரும்பவில்லை, இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்று அதிரடியாக வெளியேறி தன் மானத்தை விட்டு கொடுக்காத தமிழச்சி என்று நிருபம் செய்துள்ளார் மணிமேகலை.

மணிமேகலை போன்று தாங்களும் பாதிக்கப்பட்டதாக இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனிதா சம்பத், பாவனா போன்றவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பிரியங்காவுக்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த விவகாரம் கன்னட – தமிழ் என்று மோத ஆரம்பித்து விட்டது, அதாவது கன்னடத்தைச் சார்ந்த பிரியங்காவின் அடக்குமுறையால் தமிழகத்தைச் சார்ந்த தமிழச்சி மணிமேகலை வெளியேறிவிட்டார் என்று ஒரு தரப்பினர் மொழி ரீதியான தாக்குதலிலும் ஈடுபட்டு வருவது இந்த பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here