பிரேமலதாவுக்கு பண ஆசையா.? விஜயகாந்தை இப்படி தான் பயன்படுத்தினரா.? முக்கிய பிரபலம் சொன்ன பகீர்…

0
Follow on Google News

கோலிவுட் திரையுலகில் மினி ஜேம்ஸ் பாண்டு என்று புகழப்படும் அளவுக்கு, மிகவும் நேர்த்தியாக ஆக்ஷன் சாகச படங்களை தேர்வு செய்து நடித்து, கேப்டன் என கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். நடிப்பை தாண்டி, தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் கால் பதித்து…

தமிழ் சினிமாவில் ஹீரோவாக உயர்ந்த இவர்… ரீல் லைஃபில் மட்டும் இன்றி, ரியல் லைஃபிலும் ஹீரோவாக வாழ்ந்தவர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தனக்கென்று தேமுதிக கட்சியை உருவாக்கி அரசியலில் குதித்தவர். இப்படிப்பட்ட விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்துக்கு கடந்த 18 ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்க 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் வேதனை அடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு, கேப்டன் நலமாக இருக்கிறார்.

அவர் வீடு விரைவில் திரும்புவார், நம்மை எல்லாம் சந்திப்பார். அதுவரை எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். மருத்துவமனை அறிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் பிரேமலதா மற்றும் விஜயகாந்த் குறித்து பாண்டியன் அவர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “கேப்டனின் உடலில் பின்னடைவு ஏற்பட்டதில் இருந்தே பிரேமலதாவும் அவரின் தம்பியான சுதீஷுமுமே பொது இடங்களில் அதிகமாக தெரிய ஆரம்பித்தனர். இவர்கள் இருவர் தான் கேப்டன் இப்படி ஆனதற்கு காரணம் என்றெல்லாம் பலர் பேசுகின்றனர்.

விஜயகாந்த் அரசியல் வந்த உடனே சுதீஷ் ஒரு வேலையை காட்டி உள்ளார். அதாவது கட்சியில் ஒரு பதவி வாங்கித் தருகிறேன் என்று கூறி பலரிடம் காசு வசூல் பண்ணி உள்ளார். அதன் மூலம் 100 கோடி பணத்தையும் திரட்டியுள்ளார். அதை வைத்து பெரிய பில்டர்ஸ் ஆகிவிடலாம் என நினைத்த சுதீஷை ஒரு மாரவாடி ஏமாற்றி உள்ளனர். அதில் இருந்து அவரின் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. அதனால்தான் அவர் இப்பொழுதெல்லாம் வெளியே தெரிவதில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “தற்போது விஜயகாந்துக்குப் பிறகு அவரின் மகனும் பிரேமலதாவும் தான் உள்ளனர். விஜயகாந்துக்கு பல சொத்து உள்ளது. எப்படியும் சொத்து மதிப்பு 2000 கோடி இருக்கும். இவருக்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் வீடு, கோயம்பேட்டில் பல ஏக்கரில் கட்சி அலுவலகம், திருமண மண்டபம் போன்றவை உள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பிரேமலதா கோடிகளில் புரள ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு கொடுக்க மனம் இல்லாமல் மாறி விட்டார்.

அதனால்தான் கோயம்பேட்டில் உள்ள மண்டபத்திற்கு நிலம் கொடுத்த ஒரு பெண்ணிற்கு இன்னும் பணமே கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அது மட்டும் இல்லாமல் கட்சி நிர்வாகிகளிடம் பல லட்சம் பணத்தை வாங்கி தன்னுடைய சொத்தாக மாற்றிவிட்டார். இதனால் தான் நடிகர் அருண்பாண்டியே விஜயகாந்த் கட்சியில் இருந்து ஓடிவிட்டார். அவரிடம் இவ்வளவு பணம் கொடு அவ்வளவு கொடு என்று தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தார்.மேலும் விஜயகாந்தை ஒரு ஏடிஎம் மிஷின் ஆக தான் பிரேமலதா பயன்படுத்தி வந்தார்” என்று பேசியுள்ளார்.