கே.பி.ஒய்.பாலா உதவி செய்வது இதற்கு தானா.? இதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா.?

0
Follow on Google News

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் பிரபலமானவர் கே பி ஒய் பாலா. மேலும் விஜய் டிவியில் ஒலிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்தடுத்து காமெடி கவுண்டர் செய்து பலரையும் சிரிக்க வைத்ததால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இதைத்தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொலைக்காட்சியில் தன் திறமை மூலம் சம்பாதித்து வரும் கே பி ஒய் பாலா சமீப காலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சினிமாவில் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளே ஏழை மக்களுக்கு உதவ தயங்கும் நிலையில், பாலா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தேவையானவர்களுக்கு உதவி செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை மாநகரம் முழுவதும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த தொகையை தமிழக அரசாங்கத்திடம் வழங்கி உதவிக்கரம் நீட்டினர். அப்போது கே பி ஒய் பாலாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாயை நிவாரண தொகையாக வழங்கி உதவி செய்தார்.

பாலாவின் இந்த நடவடிக்கையை தமிழக மக்கள் பாராட்டினர். அதைத்தொடர்ந்து, வறுமையால் வாடும் பலருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து பலரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார். மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியருக்கு பைக்கை சர்ப்ரைஸ் ஆக கொடுப்பது, என்று இதுபோல பலருக்கும் உதவி செய்வதற்காக தன்னுடைய வருமானத்தை வாரி வாரி வழங்கி இருக்கிறார்.

அதையடுத்து, பாலாவின் உதவி செய்யும் மனப்பான்மையை கவனித்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இருவரும் இணைந்து ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன. இதற்கிடையில், மேடை நிகழ்ச்சியில் கே பி ஒய் பாலாவிடம் உங்களுக்கு என்ன ஆசை என்று கேட்கப்பட்டபோது, தனக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பாலா கூறியிருந்தார்.

இதனால் கே பி ஒய் பாலாவை கசினிமாவில் ஹீரோவாக வளர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் இமேஜை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் பல்வேறு பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. இப்படியான சூழலில், ஏழை மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்துவரும் பாலாவின் பின்னணியில் விஜய் டிவி நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயனை தங்களுடைய வீட்டுப் பிள்ளை என விஜய் டிவி அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும். அந்த வகையில், கே பி ஒய் பாலாவையும் தங்களுடைய அடுத்த ஹீரோவாக கோலிவுட்டில் வளர்த்து விட்டால் விஜய் டிவியின் புகழ் உச்சத்தை எட்டும். எனவே தான் பாலாவை சினிமாவில் ஹீரோவாக விஜய் டிவி பின்னணியில் பல்வேறு வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் ஆன சுபேர் கூறுகையில், மேடை ஒன்றில் ராகவா லாரன்ஸ் பாலாவை வைத்து படம் தயாரிக்கப் போவதாக கூறிய போது, கே பி ஒய் பாலா தனக்கு எதுவும் தெரியாதது போல அழுதார். விஜய் டிவி பின்னணியில் வேலை பார்ப்பது தெரிந்தும், தெரியாதது போல ஏன் அழ வேண்டும். இதெல்லாம் நடிப்பு தானா. பாலாவும் இந்த விஷயத்தில் இப்படி இருக்கிறாரே” என்று பேசியுள்ளார். இந்நிலையில் எது எப்படியோ பாலா ஏழை மக்களுக்கு உதவி செய்து வருவது குறித்து எத்தனை விமர்சனம் வந்தாலும் அவரின் செயல் நிச்சயம் பாராட்டுகிரியது தான் என பலரும் பாராட்டி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.