திரிஷாவுக்கு விஜய் கொடுத்த வைர நெக்லஸ்…. வருமான வரித்துறையில் போட்டு கொடுத்த திரிஷா…

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த நாள் வந்த கையோடு, அது கூடவே சேர்ந்து பல சர்ச்சைகளும் படையெடுத்து வந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாகவே youtube, instagram, twitter என மொத்த சோசியல் மீடியாவிலும் வலம் வருவது நடிகர் விஜயும் திரிஷாவும் தான். இந்த கிசுகிசுப்பு அலைகள் ஓய்ந்த பாடில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள், புதுப்புது ஆதாரங்கள் என, பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தற்போது, விஜயும், திரிஷாவும் மாறி மாறி வழங்கிக்கொண்ட பல கிப்ட் பொருட்களின் லிஸ்ட்டும் வெளியாகி புது பூகம்பம் கிளப்பியுள்ளது . கடந்த ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் அன்று, திரைத்துறையினர் முதல், அரசியல்வாதிகள் வரை என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போதெல்லாம் எந்த சர்ச்சையும் எழாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

அடுத்த நாள் Entry கொடுத்த நடிகை திரிஷா, ஒரு லிப்டில் தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் காதல் என்ற வார்த்தை அடங்கிய ஒரு Song-ஐ போட்டு வாழ்த்தியிருந்தார், அந்த வாழ்த்தால் தான், த்ரிஷா விஜய்யை காதலிக்கிறார் என கிசுகிசுப்புகள் பரவத் தொடங்கின. அதோடு நிறுத்தாமல் த்ரிஷாவும், விஜயும் சேர்ந்துதான் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். த்ரிஷாவின் புகைப்படங்களில் இருக்கும் அதே ஷூ-வை தான் நடிகர் விஜயும் அணிந்திருக்கிறார். அப்படி என்றால் த்ரிஷாவின் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தது விஜய் தான் போல என அடுக்கடுக்கான தகவல்களை கூறி வந்தனர்.

இந்த சர்ச்சை எல்லாம் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க தற்போது புதிய சர்ச்சை ஒன்று தலை தூக்கி உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜயின் எ;அலுவலகம் இருக்கும் பட்டினப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் தான் த்ரிஷா குடியிருக்கிறார் என்றும், 17 கோடி ரூபாய்க்கு அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு பிளாட்டை அவர் வாங்கி இருக்கிறார் என்றும், அந்த லிப்டில் தான் இருவரும் இந்த புகைப்படங்களை எடுத்து இருப்பார்கள் என பலரும் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது, அவர் அந்த அப்பார்ட்மெண்டை திரிஷா வாங்கவில்லை, விஜய் தான் அதை த்ரிஷாவிற்கு பரிசாக வழங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலர் அப்படி இருக்காது என்று கூறினாலும், பலர், விஜய் அப்படி செய்யக் கூடியவர் தான் எனக் கூறி வருகின்றனர். ஏனெனில், ஒருமுறை த்ரிஷா வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியது.

குறிப்பாக, அவரது வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்று வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நெக்லஸ் எப்படி வந்தது என்று கேள்வி கேட்டதற்கு, நடிகை திரிஷா இந்த நெக்லஸை விஜய் தனக்கு பரிசாக வழங்கினார் என ஒரே போடாக போட்டுடைத்துள்ளார் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள், விஜய் எதற்கு த்ரிஷாவிற்கு வைர நெக்லஸ் கிப்ட் செய்ய வேண்டும் என பல கேள்விகளை முன் வைத்திருந்தனர். அந்த வகையில் தான், நெக்லஸ் வாங்கி கொடுத்த விஜய், தன்னுடைய 17 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் கிப்டாக கொடுத்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர். அதோடு விஜய் மட்டுமில்லை, நடிகை த்ரிஷாவும், விஜய்க்கு நிறைய கிப்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளன்று த்ரிஷா ஒரு Shirt வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அதேபோன்று இன்னொரு Shirt-ஐ த்ரிஷாவும் அணிந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும் Couple goals-ஆ என பலரும் விமர்சித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here