3 வது திருமத்திற்கு முன்பு காதலித்த காதலனை 4வது திருமணம் செய்யும் வனிதா விஜயகுமார்…

0
Follow on Google News

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார், சீரியல் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலில் திருமணம் செய்து கொண்டார், இவருக்கு இது தான் முதல் திருமணம். பின்பு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா விஜயகுமார், அதன் பின்பு ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அடுத்த சில ஆண்டுகளிலே இரண்டாவது கணவர் ராஜன் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனை விட்டு பிரிந்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் முதல் கணவர் ஆகாஷை விட்டு பிரிந்த பின்பு, இரண்டாவது கணவர் ராஜனுடன் பழகுவதற்கு முன்பு, இந்த இடைப்பட்ட காலத்தில் அருண் என்கிற நபருடன் கிசு கிசுவில் சிக்கி வந்தார், ஆனால் ராஜனுடன் நெருங்கி பழகி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்பு ராஜனை விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா ராபர்ட் மாஸ்டர் உடன் கிசு கிசுவில் சிக்கினார்.

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் பொது இடங்களுக்கு ஜோடியாக வலம் வருவது, வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சொல்வது, ரியாலிட்டி ஷோக்களில் ஜோடியாக கலந்து கொள்வதுமாக இருந்த ராபர்ட் மாஸ்டர் – வனிதா விஜயகுமார் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.

வனிதா – ராபர்ட் மாஸ்டர் இருவரும் காதலித்து வந்த போது வனிதா பெயரை ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தியதும் பின்பு இருவருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த பின்பு, பச்சை குத்திய வனிதா பெயரை அளித்து விட்டார் ராபர்ட் மாஸ்டர். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருந்த வனிதா வாழ்க்கையில் பீட்டர் என்கிற நபர் என்ட்ரி கொடுக்க, பீட்டரை காதலித்து முன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா.

மூன்றாவது திருமணம் நடந்த சில மாதங்களில், பீட்டர் பால் – வனிதா இருவருக்கு இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட பீட்டர் பாலை வீட்டில் இருந்து வெளியேற்றினார் வனிதா. இதனை தொடர்ந்து திருமணம் நடந்து சில மாதங்களில் இந்த தம்பதியினர் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து மட்டுமல்லாமல் வனிதா நான்காவது திருமணத்தை செய்து கொள்வாரா? அல்லது ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்த தன்னுடைய கணவருடன் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு வந்தது. இப்படியொரு சூழ்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்ளின் கேள்விக்கு பதிலளித்து வந்த வணிதாவிடம் ரசிகர் ஒருவர், எப்போது 4வது திருமணம்? எங்களையும் கூப்பிடுங்க என கேட்டார்.

இதற்கு வனிதா ‘போஸ்டர் அடித்து நியூஸ் கொடுப்பேன். தமிழ்நாட்டையே அழைப்பேன்’ என கூறி இருந்தார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் ப்ரபோஸ் செய்வது போல் போஸ் கொடுத்து சேவ் த டேட் என்று அக்டோபர் 5-ம் தேதியை தெரிவித்திருந்தார். இந்த போஸ்டர் வைரலானதை தொடர்ந்து வனிதா இரண்டாவது திருமணம் செய்த கணவரை விட்டு பிரிந்து மூன்றாவது திருமணம் செய்வதற்கு முன்பு காதலித்த காதலன் ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்ய போகிறார், திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து வருகிறது என தகவல் பரவியது.

ஆனால் வனிதா நான்காவது திருமணம் செய்ய போகிறார் என்பதில் உண்மை இல்லை என்றும், இது Mr & Mrs எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் வரும் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிடபோகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here