தொகுப்பாளினிக்கு அந்த மாதிரி நோய்… இதனால் தான் கணவரை விட்டு பிரிந்தாராம்..

0
Follow on Google News

விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாகவே விஜய் டிவியில் தொடர்ச்சியாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் டிடி பலமுறை சிறந்த தொகுப்பாளர்களுக்கான விருதினையும் பெற்றிருக்கிறார். அதனாலேயே இவருடைய திவ்யதர்ஷினி என்ற பெயரில் மறந்து பலர் இவரை டிடி என்று கூப்பிட்டு வருகின்றனர்.

திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடுத்திருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி என்று பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு பல பிரபலங்களையும் சரளமாக பேட்டி எடுக்கும் இவருடைய திறமையை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதுபோல பல இசை வெளியீட்டு விழாக்களையும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும் சகஜமாக தொகுத்து வழங்கும் டிடி எப்போதும் சிரித்த முகமாகவே இருந்து வருகிறார். அதனாலயே இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். திவ்யதர்ஷினிக்கு 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்ற தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல

பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை கொடுத்திருந்தனர். சந்தோஷமாகவே இவர்களுடைய திருமணம் அதைத் தொடர்ந்து ரிசப்ஷன் என அனைத்தும் நடந்திருந்தது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்குள் பிரிந்து விட்டனர். ஆனால் தன்னுடைய சோகமான வாழ்க்கையை வெளியே காட்டிக் கொள்ளாத டிடி இப்போதும் தைரியமாக பலருக்கும் மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் பலரும் அவரை பாராட்டிக் கொண்டிருந்தாலும் சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் டிடியின் விவாகரத்துக்கான காரணம் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, “டிடியும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்குள் பாடி டிமாண்டிற்காக திருமணம் செய்து கொண்டார்கள். அது ஒரு நோய். இருவரும் தங்கள் உடலை மட்டுமே விரும்பினார்கள். அது முடிந்த பிறகு விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.