ஆணவத்தை விக்ரமிடமே காட்டிய பா.ரஞ்சித்… தங்கலான் படப்பிடிப்பில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

கே ஜி எஃப் திரைப்படத்தில் கோலார் தங்க வயலில் தங்கத்தை எடுத்த பின்பு அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அடிமைகள் பற்றிய கதையாக இருந்தது. கிட்டத்தட்ட கதையின் கரு கேஜிஎப் போன்றே தங்கலான் இருந்தாலும் கூட முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தங்கலான் படம் படமாக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு விக்ரம் பிறந்த நாள் அன்று தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் டீசர் இதற்கு முன்பு வெளியாகி விக்ரமுக்கு மிக பெரிய பாராட்டை பெற்று தந்தது, அதே போன்று இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது, அதாவது தங்கலான் படத்தை விக்ரம் படம் என்கிற பார்வையில் பார்கின்றவர்கள் இந்த படத்திற்கு ஆதரவாகவும், இல்லை இது பா.ரஞ்சித் படம் என்கிற பார்வையில் பார்கின்றவர்கள் தங்கலான் படத்தை கடினமாக எதிர்த்து வந்தது குறிப்பிடதக்கது.

அந்த அளவுக்கு பா.ரஞ்சித் மக்கள் மத்தியில் கடும் வெறுப்பை சம்பாரித்து வைத்துள்ள ஒரு இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் பொழுது அடிக்கடி இயக்குனர் பா ரஞ்சித்திடம் சந்தேகங்களை கேட்டுக் கொண்டே வந்துள்ளார் விக்ரம், அடுத்தது என்ன.? அடுத்தது என்ன? என அந்த கதை குறித்தும், காட்சிகள் குறித்தும் அதிகமாக சந்தேகங்களை கேட்டுக் கொண்டு வந்துள்ளார் விக்ரம்.

ஒரு கட்டத்தில் கடுப்பான பா.ரஞ்சித் தன்னுடைய உதவியாளரை அழைத்து இவரிடம் உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தையும் கேளுங்கள், இவரிடம் நான் கேட்டு அதற்கான பதிலை உங்களுக்கு தயார் செய்து தருகிறேன். தொடர்ந்து நீங்கள் என்னை கேள்வி கேட்டு வருவதால் எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்று பா ரஞ்சித் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் மிக பேசிய நடிகராக வலம் வந்தவர் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.

ஆனால் சமீபத்தில் ஓன்று இரண்டு படம் விக்ரம் நடிப்பில் வெளியாகி ஓட வில்லை என்பதால் மீண்டும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இழந்த இடத்தை மீட்க வேண்டும் என முயற்சித்து வரும் விக்ரம், பா ரஞ்சித் படத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பை போட்டு வந்துள்ளார், ஆனால் விக்ரமுக்கு பா ரஞ்சித் அவருடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அறிமுகம் செய்து வைப்பது போன்று, ஒரு மாபெரும் கலைஞனை உதாசீன படுத்தும் வகையில் நீங்கள் என்னை கேள்வி கேட்டு வருவதால் எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது என்று பா ரஞ்சித் விக்ரமிடம் தெரிவித்ததெல்லாம் எல்லை மீறிய செயல் என சினிமா வட்டாரத்தில் மூணு முனுத்து வந்தனர்.

இப்படி சிறு சிறு உரசல்கள் இயக்குனர் பா ரஞ்சித்துக்கும் விக்ரமுக்கும் தாங்கலான் படப்பிடிப்பின் போது நடந்தாலும் அதை பெரிது படுத்தாமல் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் அந்த படத்தில் அர்ப்பணிப்போடு நடித்து கொடுத்துள்ளார் விக்ரம். அந்த வகையில் நீண்ட வருடமாக சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை தங்கலான் படத்தின் மூலம் நிலை நிறுத்தி மீண்டும் சினிமாவில் முன்னணி வரிசையில் நட்சத்திரமாக ஜொலிபார் விக்ரம் என பலராலும் எதிர்பார்க்க பட்டது.

ஆனால் பலருடைய உழைப்பு ஒரே நபரால் வீணடிக்கப்பட்டு விட்டது என்று சொல்லும் அளவுக்கு பா.ரஞ்சித் என்கிற தனி மனிதனால் தங்கலான் திரைப்படம் எதிர்மறை விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு மாபெரும் கலைஞன் விக்ரம் தன்னுடைய முழுமையான உழைப்பை வெளிபடுத்தியும், பா.ரஞ்சித்துக்கு இருக்கும் எதிர்ப்பினால் தங்கலான் மக்களால் புறக்கணிக்கப்பட்டும், மறுபக்கம் எதிர்மறை விமர்சனத்தை பெற்று வருவதால், அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க எந்த ஒரு முன்னணி நடிகர்களும் தயக்கம் வர தானே செய்யும்.