மாயமான லாரன்ஸ்… தன்னை நல்லவராக காட்ட இப்பவந்து லட்சுமி ராமகிருஷ்னன் என்னெல்லாம் சொல்கிறார் பாருங்க மக்களே…

0
Follow on Google News

தற்போது சோசியல் மீடியா முழுவதும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லாரன்ஸ் எங்கே என தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் ‘மேடம் ஆக்சன் மேடம்’, இவனை விடுங்க அப்படியே சில்லு சில்லுன்னு நடப்பான் என்று பேசிய வார்த்தை தான் ஹைலைட். பின் ‘லாரன்ஸ் தத்துவங்கள்’ என்று இவரது பேச்சுகளை கட் செய்து வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாரன்ஸ் குறித்து தற்போது சோசியல் மீடியாவில்ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில், இதை பார்த்து லாரன்ஸ் என்ன செய்கிறார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. . இந்த நிலையில் லாரன்ஸை தேடி அவர் வேலை செய்த கோயம்பேடு மார்க்கெட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள் மீடியாக்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் லாரன்ஸ் குறித்து விசாரித்ததில் பலரும், இவருடைய உண்மையான பெயர் லாரன்ஸ் கிடையாது விருமாண்டி. இவருக்கு கல்யாணம் எல்லாம் ஆகி குடும்பத்துடன் தான் வாழ்ந்து இருந்தார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகும் இவர் இங்கு வேலை செய்து கொண்டிருந்தார். கொரோனாவுக்கு பிறகு அவரை நாங்கள் பார்க்கவே இல்லை. எங்கு சென்றார் என்று கூட தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? எங்களுக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் லாரன்ஸ் குறித்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி நடத்திய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பேசுகையில், எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை உட்கார வைத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக பேசியிருக்கிறேன். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் தான் நிறைய திறமை இருக்கு. ஹியூமர் சென்சும் இருக்கு. சில பேர் நான்கு கொலைகளை செய்து விட்டு வந்து என் எதிரே உட்கார்ந்து எதார்த்தமாக பேசுவார்கள். அவர்களிடமும் ஹுயூமர் சென்சும் இருக்கும்.

ஒருத்தவர்களை ஒரு கோணத்தில் மட்டுமே காண்பிக்காமல், அவர்களுடன் மற்றொரு குணத்தையும் வெளிப்படுத்துவோம். அதோட வெளிப்பாடு தான் லாரன்ஸ் மாதிரியான ஆட்கள். ஒவ்வொரு எபிசோடையும் நீங்க எடுத்து பார்த்தாலும் இந்த மாதிரி திறமையானவங்களை நீங்க பார்க்கலாம். அன்னைக்கு லாரன்ஸ் வந்தது இப்பவும் ஞாபகத்துல இருக்கு. அவருக்குள்ள அப்படியொரு காமெடி சென்ஸ். அதனாலதான், அவரு பேசினபோதும் ஆக்‌ஷன் பண்ணினபோதும் அமைதியா இருந்தோம்.

அந்தத் திறமையும் மக்களுக்குத் தெரியணும்னுதான் அப்படியே ஒளிபரப்பினோம். நாங்க, நினைச்சிருந்தா எடிட் பண்ணியிருக்கலாமில்லையா? ஆனா, அப்படிச் செய்யல. அவரு தப்பு பண்ணிட்டு வந்திருந்தாக்கூட அவரோட திறமையை ரசிச்சோம். அதேநேரத்துல, அவருடைய தப்பையும் நியாயப்படுத்தல என்று தெரிவித்து லாரன்ஸுக்கு இருக்குற திறமைக்கு, சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னைக்கு ஒரு பெரிய காமெடியனா வந்திருப்பாரு என்று பேசிய லட்சுமி ராமகிருஷ்னன்.

மேலும் லாரன்சுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கி பிரிஞ்சு வந்த குடும்பத்தை ஒண்ணு சேர்த்து அனுப்பினதுல எங்களுக்கு ஆறுதல்தான். நாங்கள் அப்படி செய்யவில்லை என்றால் லாரன்ஸ் கண்ணனையோ அல்லது கண்ணன் லாரன்சையோ ஏதாவது செய்திருப்பார். உயிருக்கு ஆபத்தா முடிந்திருக்கும். நாங்கள் இரண்டு பேரையும் அழைத்து எதிர்காலத்தில் நடக்க இருந்த ஆபத்தை தடுத்திருக்கிறோம்.

அதற்கு மேல் அவர்களுக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை என்பதால் லாரன்ஸ் எங்களுடன் தொடர்பில்லை. அவர் இப்போ என்ன பண்றாரு, எங்க இருக்கிறார் என்று தெரியவில்லை என லட்சுமி ராமகிருஷ்னன் தெரிவித்துள்ள நிலையில், குடும்பத்துடன் ஒன்றாக இணைத்து வைத்தோம் என தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்னன் மற்றும் சம்பந்த பட்ட தொலைக்காட்சிகள் அவர் தொடர்ந்து குடுமபத்துடன் எந்த பிரச்சனை இல்லாமல் வழக்கிறாரா.? அல்லது எங்கே இருக்கிறார் என்று கூட நிகழ்ச்சி முடிந்த பின்பு எந்த தொடர்பும் லாரன்ஸ் உடன் இல்லாததால் போல் இருக்கிறது லட்சுமி ராமகிருஷ்னனின் இந்த பேட்டி.

அந்த வகையில் இவர்களுக்கு தேவை TRP ரேட்டிங்குக்கு ஒரு குடும்பத்தை கூட்டி வந்து நாறடித்துவிட்டு அனுப்பி விடுவது தான் என்றும், லாரன்ஸ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் பெரிய காமெடியனாக வந்திருப்பார் என சொல்லும் லட்சுமி ராமகிருஷ்னன், ஏன் இயக்குனராக இருக்கும் அவர் படத்திலே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம், அல்லது அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பை பெற்று இருக்கலாம், ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, இன்று லாரன்ஸ்க்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் பெருகியதும், அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக லாரன்ஸை புகழ்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..