கவரிங் நகை மேட்டரில்சிக்கிய மனோஜ்… 30 லட்சம் மேட்டரும் வெளியானது… சிறகடிக்க ஆசை விறுவிறுப்பு..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்பொழுது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் ரோகினி செய்யும் போர்ஜரி வேலைகளால் ஒவ்வொரு முறையும் ரோகிணி வசமாக சிக்க போகிறார் என்று, அந்த சீரியலை பார்த்துக்கொண்டு இருக்கிறவர்கள் எதிர்பார்க்க, ஆனால் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் ரோகினி.

மேலும் ரோகிணி மற்றும் மனோஜ் இருவருமே சேர்ந்து 30 லட்சம் விஷயத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே ஏமாற்றி வரும் நிலையில், தற்போது ரோகிணிக்கு தெரியாமலேயே மனோஜ் மற்றும் அவருடைய அம்மா விஜயா இருவரும் இணைந்து மீனா கொடுத்த நகையை கவரிங் நகையாக மாற்றி மீனா கையில் கொடுக்க, மீனா அந்த நகையை மாற்றி புது நகையை பாட்டி பிறந்தநாளுக்கு பரிசளிக்கலாம் என்று நகைக்கடைக்கு முத்துவுடன் சென்றார்.

ஆனால் அங்கே சென்ற பின்பு தான் தெரிந்தது இந்த நகை கவரிங் என்று. இதனைத் தொடர்ந்து மிகவும் ஆக்ரோஷமாக வந்த முத்துவை பாட்டி பிறந்தநாள் முடியும் வரை எதுவும் பேசக்கூடாது என அடக்கி வைக்கிறார் மீனா, இருந்தாலும் மனோஜை பார்த்து முத்து முறைப்பதை கண்டதும் மனோஜ்க்கு ஒரு பயம், அதிலே இவன் தான் உறுதியாக இந்த திருட்டு வேலையை செய்திருப்பான் என்பது சந்தேகம் இன்றி முத்துவுக்கு தெரிய வருகிறது.

இப்படி இந்த சீரியல் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து என்ன வர இருக்கிறது என்பது போன்ற தகவல் வெளியாகி இருக்கிறது, அதாவது சுருதி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை ஒருவர் திருடிக் கொண்டு ஓடி விடுகிறார், அதே வழியாக மீனா பூ கொடுப்பதற்காக செல்கிறார், அந்த நேரத்தில் சுருதி தன்னுடைய பேக் பறிபோகிவிட்டதை மீனாவிடம் தெரிவிக்க, உடனே மீனா முத்துவுக்கு போன் செய்து வரவழைக்கிறார்.

இவர்கள் மூவரும் காவல் நிலையத்திற்கு சென்று ஹேண்ட்பேக் திருடி சென்றதைப் பற்றி புகார் கொடுக்கிறார்கள், அப்போது முத்துவுக்கு தெரிந்த அந்த போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் ஒரு போலீசார் நீங்க தானே ஜீவா என்ற பொண்ணுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டீர்கள் என்று தெரிவிக்க முத்துவுக்கு ச ஞாபகம் வரவில்லை, எந்த ஜீவா என கேட்க.?

அந்த மனோஜ் என்ற பையன் பணத்தை ஆட்டையை போட்டுட்டு கனடாவுக்கு சென்ற ஜீவா, திரும்ப அவங்க கணவன் மனைவி எல்லாம் பஞ்சாயத்து பண்ணி கொண்டுட்டு போன பணத்தை வட்டியும் முதலுமா வாங்கினாங்களா.? அந்த ஜீவா பா என்று சொன்னதும். என்னது மனோஜா.? என்ன சொல்றீங்க.? அவங்க மனைவி பெயர் என்ன என்று முத்து கேட்க.? ரோகிணி என்ற போலீசார் சொல்ல,

அதற்கு அட மனோஜ் எங்க அண்ணன் தான் சார் என்ன சார் நடந்துச்சு என முத்து கேட்க.?அப்போ உனக்கு ஒன்றுமே தெரியாமையா நீ கையெழுத்து போட்ட என்று கேட்க.? சார் எனக்கு அவங்களுக்கு தெரியும் என் டாக்சியில் வருவாங்க, அதான் உதவியா இருக்கும் என்று கையெழுத்து போடேன், அட என்னப்பா நீ இந்த மனோஜோட 27 லட்சத்தை அந்த பொண்ணு தூக்கிட்டு கனடா ஓடிடுச்சு , அப்புறம் அந்த பொண்ணு இந்தியா வந்த உடனே அதை பிடிச்சு அந்த மனோஜும் ரோகிணியும் கம்ப்ளைன்ட் செய்து கடைசில வட்டி மொதலுமா 27 லட்சத்துக்கு 30 லட்சம் அந்த மனோஜ் ரோகினி வாங்கிட்டாங்க என்று அங்கிருந்து போலீசார் தெரிவிக்க.

இது முத்து, சுருதி, மீனா மூவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்குது இதனை தொடர்ந்து சுருதி, ரோகிணி இவ்வளோ ஃபிராடு பண்றாங்களா எனக்கு அப்பவே டவுட்டு, இந்த விஷயத்தை நான் எப்படி டீல் பண்றேன் பாருங்க, நீங்க அமைதியா மட்டும் இருங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி முத்துவையும் மீனாவையும் அமைதியா இருக்க சொல்கிறார். அதன் பின்பு சுருதி இந்த விஷயத்தை எப்படி ரோகினி மனோஜை இருவரிடம் டீல் செய்யப் போகிறார் என்பதுதான் சிறகடிக்க ஆசையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here