என்னாது குணசேகர் மனைவியின் காதலன் தான் ஜீவானந்தமா.? எதிர் நீச்சல் சீரியலில் புதிய ட்விஸ்ட்..

0
Follow on Google News

தொலைக்காட்சி சீரியல் டிஆர்பி யில் முதலிடம் என்றால் எப்பவும் அது சன் டிவி தான். ரியாலிட்டி ஷோ களில் மட்டுமே கவனம் செலுத்தி விஜய் டிவி மற்ற தொலைக்காட்சிகள், சன் டீவியை பின்பற்றி சீரியல் நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்ப தொடங்கியது, இந்நிலையில் யானைக்கு அடி சரக்கும் என்பது போல், சீரியல்களில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சன் டிவிக்கு கடும் போட்டியாக அமைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டார், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள்.

சீரியலுக்கு பெயர் போன சன் டிவிக்கு சற்று சீரியல் டீ ஆர்.பி ரேட்டிங்கில் பின் வாங்கினாலும், சீரியல் டி ஆர் பியில் விழுந்த உடனே மெதுவாக எழுந்து நடக்க நான் யானை அல்ல குதிரை, உடனே எழுந்து ஓட ஆரம்பித்து விடுவேன் என சவால் விடும் நோக்கில், சற்று சரிந்தாலும், எதிர் நீச்சல் சீரியல் மூலம் சீரியல் டி ஆர் பியில் நாங்க தான் கிங் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் எதிர் நீச்சல் சீரியல்.

எதிர்நீச்சல் டி ஆர் பியில் முதல் இடத்திற்கு செல்ல காரணம் அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வன் தான், ஏற்கனவே இவர் கோலங்கள் போன்ற பல வெற்றி சீரியல்களை இயக்கியவர். எதிர்நீச்சல் சீரியலில் வரும் குணசேகரனின், “இந்தாம்மா ஏய்” இந்த வசனத்திற்கே பல பேர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இந்த சீரியலின் முக்கிய கதைக் கருவே பெண்களை சார்ந்தது தான்.

குணசேகரன் போன்ற ஆணாதிக்கவாதிடமிருந்து அவரின் மனைவி மருமகள்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை தொடங்கப் போகிறார்கள் என்று தான் கதை நகர்கிறது. ஏற்கனவே கரிகாலன் வருகையில் சீரியல் செம்ம ஜாலியாக போய்க்கொண்டிருந்தது. தற்போது இவை அனைத்திற்கும் பெரிய டுவிஸ்ட்டாக ஜீவானந்தம் என்ட்ரி.

குணசேகரனை பார்த்தாலே அனைவருக்கும் அள்ளு விடும், அப்படிப்பட்ட குணசேகரனையே அசால்டாக காலி செய்துள்ளார் ஜீவானந்தம். பட்டம்மாவின் சொத்து அனைத்தும் தனக்கு தான் என்று நினைத்துக் கொண்டிருந்த குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில், அனைத்து சொத்துக்களையும் சுருட்டியுள்ளார் ஜீவானந்தம்.

தற்போது இந்த சொத்துக்களை குணசேகரன் எவ்வாறு மீட்க போகிறார்? இதற்கு ஜனனி உதவப் போகிறாரா? என்ற களத்தில் தான் கதை நகர்கிறது. ஆனால் திடீர் என்று வந்துள்ள இந்த ஜீவானந்தம் யார்? என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. குணசேகரின் மனைவி ஈஸ்வரிக்கு கல்லூரி காலத்தில் ஒரு காதல் இருந்தது. ஆனால் அவரின் குடும்பத்தினர் அதனை ஏற்காமல் குணசேகரனுக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஈஸ்வரி காதலித்த அந்த நபர் கல்லூரியில் ஒரு சமூகப் போராளியாக இருந்துள்ளார். தற்போது அவரின் சாயலில் தான் ஜீவானந்தம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி ஜீவானந்தம் கதாபாத்திரமும் தன்னை சமூகப் போராளி போன்றே காட்டிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் கல்லூரி காதலன் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எதிர் நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் யார் என்று தெரிய வரும் பொழுது தான் பெரிய டுவிஸ்ட்டே ஆரம்பம் ஆகும் என்று கூறப்படுகிறது.