சூர்யாவிடம் சுருண்ட தியேட்டர் உரிமையாளர்கள்..! யாரை மிரட்டி பார்க்குறீங்க.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் இதற்கு முன்பு வெளியான சூரரைப் போற்று படம் கொரோனா ஊரடங்கு காரணமாக, ஓடிடியில் வெளியானது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது, சிறிய படங்கள் ஓடிடியில் வெளியாவதை கண்டு கொள்ளாத திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய நடிகர்கள் படங்கள் ஏதும் ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்கு திறப்புக்காக காத்திருந்த நிலையில் சூர்யா படம் ஓடிடியில் வெளியானது திரையரங்கு உரிமையாளர் தரப்பில் இருந்து எதிப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து சூரரை போற்று படம் விவாகரத்துக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யாவிடம் கூறினார்கள். ஆனால் அவரோ தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டார். இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இனி சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தாரின் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்தார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் இந்த எச்சரிக்கையை மீறி சூர்யா தன் சூரரைப் போற்று படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடம் கெத்து காட்டினார். இதற்கு பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் சென்னை கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சூர்யா குடும்பத்தினர் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கைக்கு பின்பு சூர்யா தம்பி கார்த்திக் நடித்த சுல்தான் படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதன் பின்பு சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ஓடிடியில் வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டலுக்கு தண்ணி காட்டினார் சூர்யா, ஆனால் இந்த வகையில் விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னனி நடிகர்கள் காத்திருந்து தங்கள் படங்களை தியேட்டரில் வெளியிட்டனர்.

இந்நிலையில் சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படத்தை வெளியிட மாட்டோம் என எச்சரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் குறிப்பாக சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னிர்செல்வம் தற்போது சூர்யா நடிப்பில் வரும் மார்ச் 10 ம் தேதி வெளியாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை,

சூர்யாவை மிரட்டி அடிபணிய வைத்து விடலாம் என நினைத்த திரையரங்கு உரிமையாளர்கள் இறுதியில் சூர்யாவிடம் சுருண்டு விழும் அளவுக்கு சூர்யா கெத்து காட்டி தனது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். இந்நிலையில் இந்த விஷயத்தில் சூர்யா கெத்து தான் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

திருட்டுத்தனம் செய்து சிக்கிய அட்லீ… இந்தியில் இருந்து துரதியடிக்கப்படுகிறார் அட்லீ.. என்ன செய்து மாட்டினார் தெரியுமா.?