நீயெல்லாம் ஆம்பளையா… வெளியே போ…பொங்கி எழுந்த பாக்கியலட்சுமி… வெளியான அடுத்தடுத்து என்ன.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்பொழுது டி ஆர் பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கோபியின் கள்ளக்காதல் விவகாரம் மனைவி பாக்கியலட்சுமிக்கு தெரிய வருகிறது. இதனால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு கணவர் கோபியை நிற்க்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாக்யலட்சுமி.

பின்பு ஓரிரு நாட்களில் வீடு திரும்பும் பாக்கியலட்சுமி, உடையை மாற்றிக் கொண்டு நேராக கணவனை விவாகரத்துக்கு பெறுவதற்காக நீதிமன்றம் சென்று விவாகரத்தும் பெற்று விடுகிறார். விவகாரத்தை பெற்றுவிட்டு கோபி முன்கூட்டியே வீட்டிற்கு வந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் இனிமேல் பாக்கியலட்சுமி இங்கே வரமாட்டார். அவர் வந்தாலும் நான் அனுமதிக்க மாட்டேன் என தனது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கிறார்.

மேலும் பாக்கியா உடன் யாரும் எந்த ஒரு தொடர்பும், பேச்சுவார்த்தை வைக்கக் கூடாது என கண்டிஷனும் போடுகிறார் கோபி. ஆனால் எதிர்பாராத விரதமாக பாக்யா வீட்டிற்கு வந்துவிடுகிறார். இதை பார்த்த கோபிக்கு பெரும் அதிர்ச்சி, யாரிடம் எந்த பதிலும் பேசாமல் நேரே வீட்டின் உள்ளே அறைக்குள் செல்லும் பாக்யா பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துவிட்டு, கையில் பெட்டியுடன் வெளியில் வருகிறார்.

குடும்ப உறுப்பினர்கள் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என கெஞ்சுகிறார்கள். ஆனால் பாக்யா வெளியே போகட்டும், இனிமே இங்கே இவளுக்கு இடம் இல்லை என, தன் மீது உள்ள தவறுகளை மறைத்து விட்டு, மொத்த பழியையும் பாக்கியா மீது போடுகிறார் கோபி.இந்நிலையில் ஒரு வாரமாக பதிலே பேசாமல் அமைதியாக இருந்த பாக்யாவை பார்த்து, வாயை திறந்து ஏதாவது பேசு என பார்வையாளர்கள் பொறுமை இழக்கும் அளவுக்கு அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில் பாக்யாவின் மகள் கதறி அழுக, அதற்கு பாக்யா உனக்கு அம்மா வேண்டுமா.? அப்பா வேண்டுமா.? என கேள்வி எழுப்புகிறார். இதனை தொடர்ந்து கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி. பாக்யா சரமாரியாக கோபிக்கு தக்க பதிலடி கொடுக்கிறார். பாக்யாவின் பதிலடியை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே போ… என பாக்யா கையில் இருக்கும் பெட்டியை தூக்கி வெளியே வீசுகிறார் கோபி.

அந்த பெட்டி கீழே விழுந்த திறக்கிறது, அதில் கோபியின் உடைகள் இருக்கிறது. அதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த கோபி, என்னை விட்டுவிட்டு வெளியேற்றுவதற்கு திட்டமிடுகிறாயா.? என கேட்க. அதற்கு ஆமாம், வெளியே போ, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என சரமாரியாக கேள்வி கேட்டு. இது என்னுடைய வீடு உனக்கு இங்கே இடமில்லை என பாக்கியா பேச, அவருக்கு ஆதரவாக அவருடைய மாமனார் மற்றும் மகன் எழில் இருவரும் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

அதன் பின்பு தன்னுடைய கள்ள காதலி ராதிகாவை தேடி செல்லும் கோபியை, அங்கே ராதிகாவும் வீட்டில் அனுமதிக்கவில்லை. இதனால் கோபி நடுத்தெருவில் கோவிலில் நிற்கும் காட்சிகள் அடுத்தடுத்து நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?