வாடிவாசல் வருமா.? வராத.? வெற்றிமாறனுக்கு என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்று, எப்ப தான் இந்த விடுதலை திரைப்படத்தை எடுத்து முடிப்பீர்கள் என்று கேட்கும் அளவுக்கு தொடர்ந்து ஒவ்வொரு முறையும் படமாக்கப்பட்டு முடிக்கும் பொழுது, வெற்றிமாறனுக்கு அதில் சில காட்சிகள் திருப்தி இல்லாத காரணத்தினால் மீண்டும் மீண்டும் பலமுறை இந்த படத்தின் காட்சிகள் ரீசூட் செய்யப்பட்டது.

அந்த வகையில் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கால் சீட் கொடுத்து ஒரு கட்டத்தில் வெற்றிமாறனிடமிருந்து எப்போது நாம் விடுதலையாகும் என்கின்ற மனநிலைக்கு வந்து விட்டனர் விஜய் சேதுபதியும் நடிகர் சூரியும், இந்த நிலையில் விடுதலை படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்பே விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் தானு தயாரிப்பில் வாடிவாசல் என்கின்ற படத்தில் கமிட்டானார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த படத்தின் போட்டோ சூட் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று, படத்தின் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. இந்த படம் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதை என்பதால் ஒரு ஜல்லிக்கட்டு காளை உடன் நடிகர் சூர்யா சகஜமாக பழகுவதற்காக பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவார் என சூர்யா காத்திருந்து ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் விடுதலை படத்தையே முடிக்காமல் இழுத்தடித்தது தொடர்ந்து அடுத்து சிறுத்தை சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி பிஸியாகி உள்ளார் சூர்யா.

மேலும் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சூர்யா இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனும் விடுதலை படத்தை முடித்துவிட்டு அடுத்த தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி அந்த படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது .

இதனால் வாடிவாசல் திரைக்கு வருமா என்கின்ற சந்தேகம் பலருக்கு இருந்த நிலையில், இந்த படம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியான போதே சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஹிந்தி டப்பிங் வியாபாரத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் தானும் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதனால் பல இடங்களில் வியாபார ரீதியாக வாடிவாசல் படத்தை பேசி முடிக்கப்பட்ட நிலையில் இந்த படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும். வாடிவாசல் படம் நிச்சயம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கூறப்படுகிறது.