ரஜினியின் சின்ன பங்கு கூட இல்லை.. அவமானத்தில் கண் கலங்கி கதறி அழுத தனுஷ்..

0
Follow on Google News

எதிர்பாராத விதமாக சினிமாவில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமான தனுஷ் நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது, அடுத்தடுத்து அவருடைய நடிப்பில் தொடர்ந்து மூன்று வெற்றியை கொடுத்த தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா என்கின்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் தனுசுக்கு மிகப்பெரிய அளவில் பேரும் புகழும் பெற்று தந்தது.

இதனால் ஏற்கனவே சினிமாவில் கடுமையாக போராடி வந்த பல நடிகர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தித் தந்தது. நடிகர் தனுஷ் பல இடங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி அவமான பட்டவர், அவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில், நாலு எலும்பு தான் இருக்கு இவரெல்லாம் படத்தில் நடிக்கும் போது, நான் நடிக்க கூடாதா என ஊருக்குள் பல பேர் சொல்லிட்டு இருந்த காலம் அது.

தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது கூட அங்கே இருக்கும் லைட் மேன்கள் தனுசை பார்த்து, அவருடைய ஒல்லிக்குச்சி உடம்பை கேலி கிண்டல் செய்வது பல முறை தனுஷ் காதிலே விழுந்துள்ளது. இதனால் பல முறை படப்பிடிப்பு தளத்தில் தனியாக சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் தனுஷ். சினிமாவில் என்ட்ரி கொடுத்து குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.

ஏற்கனவே தனுஷ் சினிமாவில் அடைந்து வரும் தொடர் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத சினிமா துறையினருக்கு, ரஜினிகாந்த் மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்டது மேலும் கோபத்தை ஏற்படுத்தி அவர்களின் வயித்தெரிச்சலுடன் உள்ளானார் தனுஷ், இதற்கு காரணம் தனுஷ் வளர்ச்சி மீது அவர்களுக்கு இருந்த பொறாமை தான் என்பது குறிப்பிடதக்கது.

தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னைத்தானே செதுக்கி கொண்ட தனுஷ், கடுமையான போராட்டத்தினால் தன்னை தானே வளர்த்து கொண்டார். அந்த வகையில் மிகவும் ஒல்லியாக இருந்த தனுஷ் கடுமையான உடல் பயிற்சி மூலம் கட்டு கோப்பாக தன்னுடைய உடலை மாற்றி கொண்டார். அதேபோன்று பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமா துறையில் நுழைந்த தனுஷ்க்கு பெரிதாக படிப்பறிவு இல்லை.

அதனால் அவருக்கு சரளமாக இங்கிலீஷ் பேச தெரியாமல் பல இடங்களில் அவமானப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது மனைவிக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியும் எனபதால், மனைவி ஐஸ்வர்யா உதவியுடன் ஆங்கிலம் கற்று கொண்டு சரளமாக ஆங்கிலம் பேச தொடங்கிய தனுஷ் ஹாலிவூட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டாலும் கூட, ரஜினிகாந்த் சிபாரிசில் இதுவரை ஒரு படத்தில் கூட தனுஷ் கமிட்டாகவில்லை.

தன்னுடைய கடுமையான உழைப்பால், இன்று மிக பெரிய உயரத்தில் இருக்கும் தனுஷ் வளர்ச்சிக்கு சிறிய பங்கு கூட ரஜினியின் உதவி இருந்ததில்லை என்றும். மேலும் கேலி கிடலுக்காக ஒரு காலத்தில் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி தனுஷ் இன்று நடிப்பில் அசுரன் என்று அழைக்க படும் அளவுக்கு மிகப்பெரிய உச்சத்தில் இருப்பதற்கு அவர் பட்ட அவமானங்கள் அனைத்தையும் தனக்கு உரமாக மாற்றிக்கொண்டு தன்னுடைய கடின உழைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.