அவங்க வயிதெறிச்சல் உங்களை சும்மா விடுமா.? ச்சீ ….இப்படி ஒரு கல் நெஞ்சம் படைத்த மோசமானவரா ரஜினிகாந்த் மனைவி லதா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் கோடி கோடியாக சம்பாரித்து, சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அவர் குடும்ப பற்றிய பின்னணி மனசாட்சி இல்லாமல் செயல்பட்டு வரும் கொடூர குணம் கொண்டவர்களாக இருக்கிறது அவர்கள் பற்றி வெளிவரும் தகவல்கள். நடிகர் ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பிராமண சமூகத்தை சேர்ந்த லதா, பண விஷயத்தில் ரெம்ப கரார் பிடித்தவரான லதா இரக்கமற்ற கல் நெஞ்சம் படைத்தவர் என அவரை பற்றி பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாரிக்கலாம் என்பது பற்றியே லதாவின் சிந்தனைகள் இருக்கும் என்றும், அதற்கு உதாரணமாக பாபா படத்தின் படப்பிடிப்பின் போது அமைக்கப்பட்ட செட்களை படப்பிடிப்பு முடிந்தும் பிரிக்காமல் படம் வெளியான பின்பு அந்த செட் உள்ளே அந்த படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய உடைகள் , சிகை போன்ற பொருட்களை வைத்து பொருட்காட்சி நடத்தி பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என திட்டமிட்டு இருந்துள்ளார்.

ஆனால் படம் படு தோல்வி அடைந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளார் லதா. மேலும் ஆசிரமம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் லதா முறையாக வாடகை செலுத்தாமல் பெரும் சர்ச்சையில் சிக்கி நடிகர் ரஜினிகாந்துக்கு அவ பெயரை ஏற்படுத்தி தந்தார், மேலும் லதா வாடகை பாக்கி தராமல் இழுத்தடிப்பது பற்றி அந்த கட்டிடம் உரிமையாளர் ரஜினிகாந்திடம் முறையிட்ட போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என ஒதுங்கி கொண்டாராம் ரஜினிகாந்த், இதன் பின்பு தான் இந்த வாடகை பாக்கி விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை காரணம் காட்டி, ரஜினிகாந்த் மனைவி லதா, அவர் நடத்தும் ஆசிரமம் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர் என யாருக்குமே சம்பளம் தரவில்லை என கூறபடுகிறது, இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஊழியர்கள், ரஜினிகாந்த் மனைவி லதாவை பலமுறை சந்தித்து தாங்கள் படும் சிரமத்தை எடுத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுமார் ஒரு வருடத்துக்கு மேல் கொரோனாவை காரணம் காட்டி இதுவரை தொழிலார்களின் சம்பள பாக்கியை ரஜினிகாந்த் மனைவி லதா தரவில்லையாம், இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாதே படத்துக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அவரது மனைவி நடத்தும் ஆசிரமம் பள்ளியின் மொத்த ஊழியர்களின் ஒரு வருட சம்பளம் சுமார் 50 லட்சம் தான் என்றும்.

இதை கூட கொடுக்க மனமில்லாமல் கல் நெஞ்சத்துடன் ரஜினிகாந்த் மனைவி நடந்து கொள்வது தொழிலார்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ரஜினிகாந்தை திருமணம் செய்த பின்பு அவரை வைத்து பணம் சம்பாரிப்பதில் இருக்கும் ஆர்வம், பணத்தை வெளியே எடுப்பதில் லதாவுக்கு மணம் இருக்காது என்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.