விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ரஜினிகாந்த்..! கதறி அழுத லதா…. பின் நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளது தற்போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இவர்களை சமாதானம் செய்து இணைத்து வைக்கும் முயற்சியில் இருவரின் குடும்பத்தினரும் மற்றும் சிலரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் பற்றிய ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது.

தனது 31 வயதில் பின்னணி பாடகியாக இருந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த், இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு குழந்தைகள் பிறந்து இல்லற வாழ்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், மனைவி மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மது பழக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த், மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி லதாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், ஒரு கட்டத்தில் குடும்பத்தை முழுமையாக வெறுக்கும் நிலைக்கு வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இதனை தொடர்ந்து குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் தனியாக வாழ்ந்து வந்த ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரஜினிகாந்த் சில நாட்களில் பிரச்சனை சரியாகி மீண்டும் குடும்பத்துடன் இணைந்து விடுவார் என இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்த லதா விவாகரத்து நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே ரஜினிகாந்த் குருநாதர் இயக்குனர் பாலச்சந்தரை நேரில் சந்தித்து நடந்ததை தெரிவித்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார் லதா, இதன் பின்பு ரஜினிகாந்தை நேரில் அழைத்து பேசிய இயக்குனர் பாலச்சந்தர், சமாதனம் பேசியுள்ளார், ஆனால் ரஜினிகாந்த் தனக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார், அதற்கு வேறு ஏதவாது பெண்ணை நீ இரண்டாவது திருமணம் செய்ய திட்டம் இருக்கின்றதா என பாலச்சந்தர் கேட்க அப்படியெல்லாம் இல்லை என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

பின் உன்னுடைய இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்,தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நீ, விவாகரத்து செய்தால் பெண்கள் மத்தியில் உனக்கு ஆதரவு கிடைக்காது, பின் சினிமாவிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாலசந்தர் அறிவுரையை ஏற்று மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் வருடங்கள் பல கடந்து தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்துள்ள இந்த சூழலில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.