இது சரிப்பட்டு வராது… சூர்யா படத்தில் இருந்து விலக பாலா எடுத்த அதிரடி முடிவு… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா சமீப காலமாக குடும்பம் மற்றும் சினிமா இரண்டு பக்கமும் பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், பாலா அவருடைய மனைவி முத்துமலரை விகாரத்து செய்த பின்பு, தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கினார். தொடர் தோல்வியை கொடுத்து வந்த பாலா ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார். இதனால் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்கும் வகையில் வணங்கான் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் வணங்கான் படத்தை பாலா இயக்கி வருகிறார். இந்த படம் தொடங்கியது முதல் சிறு சிறு பிரச்சனைகள் பாலா மற்றும் சூர்யா இடையே இருந்து வந்துள்ளது. இருந்தும் உதவி இயக்குனர்கள் மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சனை சரி செய்யப்பட்டு கன்னியாகுமரியில் முதல் கட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சூர்யா மற்றும் பாலா இடையில் ஏற்பட்ட உச்சகட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையிலான மோதல் காரணமாக, படம் பிடிப்பில் இருந்து பாதியிலே வெளியேறி சென்னை திரும்பினார் சூர்யா. இதன்பின்பு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக, சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாமல், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்காமலே இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் ஒரு பாலம் போல் செயல்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் என்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும், அவர் இந்த படம் முடியும் வரை ஒரு உதவி இயக்குனராக இருந்து படத்தை எடுத்து கொடுத்துவிட்டு போக நடிகர் சூர்யா தரப்பில் இருந்து பேசப்பட்டுள்ளது. ஏ.எல். விஜய்க்கு நீண்ட காலமாக இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை உண்டு என்பதால் இதற்கு ஓகே செய்துள்ளார்.

இதற்கு ஆரம்பத்தில் பாலாவுக்கு ஓகே சொல்லியுள்ளார், இதனால் வணங்கான் படத்தில் ஏ.எல்.விஜய் என்ட்ரி கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் இயக்குனர் பாலா இந்த படத்தின் கதை மற்றும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகள், இனிமேல் எடுக்கக்போகும் காட்சிகள் அனைத்தையும் ஏ.எல்.விஜய்யிடம் தெரிவித்துவிடுகிறேன்.

இந்த படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என பாலா தெரிவித்தாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தன்னுடைய படைப்பில் வேறு ஒருவர் இணைவதை பாலா விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத சூர்யா, இது பாலா படம் தான், இருவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சனை வந்து விட கூடாது என்பதற்காக தான் ஏ.எல்.விஜய் என்ட்ரி கொடுத்துள்ளார். பாலா அண்ணன் இல்லை என்றால் எப்படி படம் எடுப்பது, இது அவருடைய படம் என இயக்குனர் பாலாவை சமாதனம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் சூர்யா.

இந்நிலையில் வணங்கான் படத்தில் ஏ.எல்.விஜய் என்ட்ரி ஆவதை பாலா விரும்பவில்லை என்பதால், எந்த படத்தில் ஏ.எல்.விஜய் இடம்பெறுவது சாத்தியமில்லை என்றும், அதே நேரத்தில் பாலாவை சமாதனம் செய்து படபிடிப்பு மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அந்த இடைவெளியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கமிட்டாகி இருந்த சூர்யா, அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

யார் இந்த செந்தில்வேலன் ஐ.பி.எஸ்.? ஒரு மருத்துவர், ஐ.பி.எஸ் ஆக உருவெடுத்த கதையல்ல நிஜம்..