உயிருக்கு போராடும் போண்டாமணி.. நம்ப வைத்து ஏமாற்றிய வடிவேலுவின் மனிதாபிமானமற்ற செயல்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் போண்டாமணி. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளின் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது சாக்கடை நீரில் விழுந்து, அந்த நீர் நுரையீரலில் தாக்கியதால் சுவாச பிரச்சனையை ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் செயல் இழந்துள்ளதை உறுதி செய்தவர்கள், உடனே சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு தனக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார் போண்டாமணி. அவர் வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து சினிமா துறையை சேர்த்த பலர் உதவி செய்ய முன் வந்தனர்.

அதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாயும், நடிகர் தனுஷ் ஒரு லட்சம் ரூபாயும் போண்டாமணிக்கு வழங்கினார்கள். இந்த நிலையில் போண்டாமணி அதிக படங்கள் இணைந்து நடித்த வடிவேலு கண்டு கொள்ளாமல் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

திருச்செந்தூர் கோவிலுக்கு வடிவேல் வருவதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் வடிவேலுவை சூழ்ந்து கொன்டு போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் தனக்கு உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார், நீங்கள் உதவி செய்வீர்களா என கேட்ட போது, அதற்கு வடிவேலு, என்னுடன் பல படங்களில் உடன் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன் என்று வடிவேலு தெரிவித்தார்.

வடிவேலுவின் பேட்டியை பார்த்த போண்டாமணி மிகுந்த எதிர்பார்ப்புடன் வடிவேலு தனக்கு உதவி செய்வார் என ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால் வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியை தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரிக்கவில்லை என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. இதனால் போண்டாமணி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் திருச்சந்தூரில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும் நிச்சயம் போண்டாமணிக்கு உதவி செய்வேன் என்று வெறும் வாயால் வடை சுட்டு விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார் வடிவேல் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடன் துணை நடிகராக பல படங்களில் நடித்த போண்டாமணி உயிருக்கு போராடி வரும் சுழலில் கூட உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் கூட விசாரிக்காத வடிவேலுவின் மனிதாபிமானமற்ற செயல் என்று கடுமையான குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் போண்டாமணி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் நான் ரஜினி, அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.பலர் எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் சினிமா துறையினர் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.வடிவேலு எதுவும் செய்யலன்னாலும் கவலை இல்லை. அவராலதான் உலகுக்கு நான் காமெடியனா தெரிஞ்சேன் என்று போண்டாமணி கூறியிருந்தார்.

ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை… இருவருக்கும் உச்சகட்ட சண்டை.