பணம் கொடுத்து சர்வதேச விருது வாங்க படுகிறதா.?சென்னையிலே ஏஜென்டாம்..! அம்பலப்படுத்திய சினிமா முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார். இதில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச்செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021′ என்ற பிரிவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ந் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது. இதே போன்று நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று டைகர் விருதை வென்றது.

மேலும், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற சர்வதேச விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றாலும் நிகழ்வின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச விருது என்பது ஒரு டுபாகூர் விருது என பிரபல சினிமா நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சில பல்கலை கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது அதில் ஒரு சில பல்கலை கழகங்கள் பணத்தை பெற்று கொண்டு டாக்டர் பட்டத்தை வழங்கி வருவதாக குற்றசாட்டுகள் உள்ளன, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து இந்த கௌரவ டாக்டர் படத்தை பெற்று பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதே போன்று சர்வதேச விருது குறித்து பயில்வான் பேசிய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகிறது அதில், சர்வதேச விருது என்பது சென்னையில் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் அதற்கான ஆட்கள் சென்னையிலே உள்ளனர். படத்தை விளம்பரம் செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுத்து சர்வதேச விருதுகளை பெற்று வருவதாக கூறிய பயில்வான் ரங்கநாதன், மேலும் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் சுமார் 3 லட்சம் கொடுத்து தான் படத்தை விளம்பரம் செய்வதர்க்காக சர்வதேச விருது வாங்கியதாக தன்னிடம் தெரிவித்ததாகவும்.

ஆனால் இந்த தகவலை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பயில்வான் பேசிய இந்த வீடியோ தற்போது ஜோதிகா-சூர்யா மற்றும் உதயநிதிக்கு சர்வதேச விருது அறிவிப்பு வந்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வடிவேல் காமெடியில் வரும் நாச்சியப்பன் பத்திரக்கடை நகைச்சுவை காட்சி போன்று பணத்தை கொடுத்து தான் சர்வதேச விருதை பெற்று கொண்டார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!