மகன் – தந்தை ஏற்பட்ட பிரட்சனை…. திருமணத்தில் தந்தை கார்த்திக் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். அவருடைய தந்தை முத்துராமன் அவருடைய காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னனி நடிகர்களுக்கு இணையான ஒரு நடிகராக இருந்தவர். இப்படி சினிமா குடும்ப பாரம்பரியத்தில் இருந்து வந்த நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கௌதம் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் நெருங்கி பழக தொடங்கினார், பின்பு இவர்களின் நெருக்கம் காதலாக மாறியது. சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தினார்கள்.

அதன் பின்பு சென்னையில் முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் கௌதம் கார்த்திக் தந்தை நடிகர் கார்த்திக் சோகமாக முக கவசம் அணிந்து இருந்ததை பார்த்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் அதற்கான காரணங்கள் தெரியாமல் புலம்பி வந்தனர். இதன் பின்னணியில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

கௌதம் கார்த்திக் தன்னுடைய திருமணத்தை பற்றி தந்தை கார்த்திகிடம் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. திருமணத்தை இறுதி செய்த பின்பு பத்திரிக்கையை அடித்து தந்தைக்கு கொடுத்துள்ளார். அப்போது ஷாக் ஆன கார்த்தி என்னிடம் திருமணம் குறித்து எந்த ஒரு ஆலோசனை நடத்தவில்லை என்று வருத்தப்பட்டவர், என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கௌதம் மொத்தமே 250 இன்விடேஷன் தான் அச்சடித்துள்ளேன், அதனால் அதிக நபர்களை அழைக்க வேண்டாம் என்று கௌதம் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் திருமணத்தை தன்னுடைய நண்பர்கள் குறிப்பாக தன்னுடைய பழைய சினிமா நண்பர்கள், சக நடிகர், நடிகைகள் என அனைவரையும் அழைத்து மிகப் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்கின்ற கனவில் இருந்துள்ளார் நடிகர் கார்த்தி.

ஆனால் மகனின் இந்த பதிலால் கடும் அப்செட் ஆகி அடுத்து திருமண நிகழ்வு குறித்து மகனிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தந்தை கார்த்திக்யிடம் முக்கிய இயக்குனர்களான மணிரத்தினம் மற்றும் சங்கர் ஆகியோருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்னுடன் வாருங்கள் என கௌதம் அழைத்துள்ளார்.

அதற்கு கார்த்தி கோபத்துடன் நீ போய் உனக்கு தேவையான ஆட்களுக்கு கொடுத்துக் கொள் நான் வரமாட்டேன் என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. திருமண விவகாரத்தில் மகன் தன்னை அவமானப்படுத்தியதை மனதில் வைத்துக் கொண்டுதான் திருமண நிகழ்வு அன்று தன்னுடைய சோகம் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக முகக் கவசம் அணிந்து யாருடனும் கலகலவென்று பேசாமல் அமைதியாக இருந்த கடமைக்கு தன்னுடைய மகன் கௌதம் திருமணத்தில் கலந்து கொண்டார் கார்த்திக் என்று கூறப்படுகிறது.