இந்த மிரட்டலாம் என்னிடம் வேண்டாம்.. அழிச்சு போயிருவ.. எச்சரித்த கே.ராஜன்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் திரைப்படம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ஒரு நடிகர் ஒரு ரசிகனை விட்டு என்னை மிரட்டுகிறான். அந்த ரசிகன் இந்த பார் எங்க தலைவரை இப்படியே பேசிக்கொண்டே இருந்தேன் வெச்சுக்க.. உன்ன என்ன பண்ணுவோம் தெரியாது. என மிரட்டி பார்க்கிறார்கள், இது மாதிரி பல மிரட்டல்கள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் நான் வந்துள்ளேன் என தெரிவித்த கே.ராஜன்.

மேலும், யாராவது ரசிகனை விட்டு என்னை மிரட்ட வேண்டும் என்று நினைத்தால், கமல்ஹாசன் ரசிகர் மூன்று பேர் சிறையில் சிறைக்கு அனுப்பியவன் நான். பிறகு நான் தான் அவர்களை ஜாமீனில் எடுத்தேன். அவனுடைய தலைவர் எடுக்கவில்லை நான்தான் பரிதாபப்பட்டு எடுத்தேன். யாருக்காக என்னிடம் சண்டையிட்டு உன் குடும்பத்தை அழித்துவிடுவேன், குண்டு வைத்து கொலை செய்து விடுவேன், என்று மிரட்டினார்களோ அவர்களின் தலைவர் இவர்களை ஜாமினில் எடுக்கவில்லை.

கமல்ஹாசன் ஆட்களை செட் பண்ணி என்னை திட்ட வைத்து பின்பு நான் கொடுத்த புகாரின் பேரின் என்னை மிரட்டிய மூன்று நபர்கள் பத்து நாட்கள் சிறையில் இருந்தார்கள். ஆனால் அவர்களை தூண்டிவிட்ட உலகநாயகன் கமல்ஹாசன் கண்டுகொள்ளவில்லை. நான்தான் பரிதாபப்பட்டு அவர்கள் பாவம் ஏழைகள் என இரக்கப்பட்டு சிறையில் இருந்து எனது பணத்தில் ஜாமினில் எடுத்தேன். தூண்டி விட்டவன் எடுக்கவில்லை, மாட்டிவிட்ட நான்தான் எடுத்தேன் என தெரிவித்த கே.ராஜன்.

மேலும், கர்நாடகா நடிகர் புனித் ராஜ்குமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவர்களை வைத்து தங்கும் இடம், உணவு என கொடுத்து பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லை நம்மளுக்கு பின்பு இந்த ஆதரவற்ற பள்ளிக்கூடம் தொடர வேண்டும் என்பதற்காக 8 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து அந்த பணத்தில் வரும் வட்டியில் அந்த பள்ளிக்கூடம் நடக்கும்படி செய்து விட்டு சென்றுள்ளார் புனித் ராஜ்குமார்,இந்த புண்ணியம் போதாதா.?

ஆனால், இங்கே ஒரு தோல்வி படம் சமீபத்தில் ஒருத்தர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது, ஆனால் அந்த நடிகர் சம்பளத்தை மேலும் 40 கோடியாக ஏற்றி விட்டார். என்ன அக்கிரமம் இது,என கே. ராஜன் பேசியிருந்தார். சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித், ரஜினி மற்றும் விஜய் மூன்று பேர் தான், இதில் கே ராஜன் நடிகர் விஜய்யை தான் குறிப்பிட்டு சம்பளத்தை ஏற்றியதையும், அவரது ரசிகர்கள் மிரட்டுவதையும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது

செக்ஸ் தொல்லை பெண்ணிடம் பளார் வாங்கிய ஜேம்ஸ் வசந்த்…நீ இசைஞானி பற்றி பேசலாமா.?