மொத்த ப்ராஜெட்ம் வேஸ்ட்.. பாலா முட்டாள்த்தனம்… பல கோடி இழந்த சூர்யா.. மீண்டும் கழுத்தை நீட்டும் சூர்யா..!

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து பாதியிலேயே நிற்கும் படம் வணங்கான். தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம் பாலா இயக்கத்தில் அவர் நடித்தன் நந்தா. இந்த படத்திற்கு பின்பு தான் சூர்யா தொடர் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

அந்த வகையில் இயக்குனர் பாலாவை தன்னுடைய குருநாதராக ஏற்றுக்கொண்ட சூர்யா, குருநாதருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தொடர்ந்து கொடுத்து வருகிறார். சில வருடங்களாக பாலாவின் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, மேலும் அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை என கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பாலாவுக்கு நன்றி கடனாக சினிமாவில் மறுவாழ்வு கொடுக்கும் வகையில் வணங்கான் படத்தில் கமிட்டானார் சூர்யா.

இந்த நிலையில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. பாலாவின் குணம் அறிந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் பாலாவின் நடவடிக்கையில் அதிருப்தியிருந்தாலும் பல்வேறு விஷயங்களில் சகித்துக் கொண்டு இயக்குனர் பாலாவுக்கு ஒத்துழைப்பு தந்து வந்துள்ளார் நடிகர் சூர்யா. பல நேரங்களில் இயக்குனர் பாலா சைக்கோ போன்று செயல்படுவார் என்கின்ற ஒரு பார்வை சினிமா துறையினர் மத்தியில் உள்ளது.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது, கதையில் பாலாவுக்கு குழப்பம் ஏற்பட்டு, அடுத்து என்ன காட்சிகள் எடுக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல், தொடர்ந்து மூன்று நாட்கள் ஒரே காட்சியை எடுத்து வந்துள்ளார், இது தயாரிப்பு தரப்பிற்கு வீண் செலவு மற்றும் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு நேரமும் விரயம். இருந்தும் சகித்துக் கொண்டு சூர்யா நடித்து வந்துள்ளார்.

இது போன்று பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சூர்யா, படப்பிடிப்பு தளத்திலிருந்து பாதியில் வெளியாகி சென்னை திரும்பினார். இதனால் வணங்கான் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதன் பின்பு சூர்யா-பாலா இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி வணங்கான் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால் படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் திணறினார் பாலா. இதனால் பல கதை ஆசிரியர்களை இடம் ஆலோசனை நடத்தியும் பாலாவால் இந்த கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியவில்லை. இந்த நிலையில் வணங்கான் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து சூர்யா- பாலா சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் சூர்யாவிடம் வணங்கான் படத்திற்கான புதிய கதை ஒன்றை தெரிவித்துள்ளார் பாலா. மேலும் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் வேண்டாம், புதிய கதைப்படி வணங்கான் படத்தை படப்பிடிப்பு முதலில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என பாலா தெரிவித்துள்ளார். இதுவரை 35 நாட்கள் வரை எடுக்கப்பட்ட வனங்கான் படத்தின் காட்சிகள் அனைத்தும் தேவையில்லை என பாலா தெரிவித்தது சூர்யாவுக்கு சில நிமிடம் ஷாக் கொடுத்துள்ளது.

பாலாவின் இந்த முடிவு, வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் தன்னுடைய குருநாதரை மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து உதவும் வகையில் வணங்கான் படத்தை முதலில் இருந்து எடுப்பதற்கு சூர்யா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கசாப்பு கடைக்காரனிடம் ஆடு தலையை நீட்டுவது போன்று, பாலாவின் குணம் அறிந்து மேலும் இதுவரை வணங்கான் படுத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை இத்துடன் போகட்டும் என்று இந்த படத்தை கைவிட்டு விலகாமல், மீண்டும் பாலாவிடம் சூர்யா கழுத்தை நீட்டுவது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையை தான் கொடுக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.