ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி… மிக பெரிய சிவகார்த்திகேயன்… என்ன சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் மற்றும் கார்த்திக் நடிப்பில் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தீபாவளி பண்டிகையின் போது திரைக்கு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வருவதால், கடன் கொடுத்தவர்கள் பிரிண்ஸ் படம் வெளியாகும் நேரத்தில் பிரச்சினை செய்ய காத்திருக்கிறார்கள்.

சர்தார் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வழியாகும் பிரின்ஸ் படத்தை பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கி உள்ளார். இதில் அன்புச் செழியன் ஏரியா வாரியாக விநியோகஸ்தர்களுக்கு பிரின்ஸ் படத்தை விற்பனை செய்து வருகிறார்.

அதில் பிரின்ஸ் படத்தின் நான்கு ஏரியாக்களை ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வாங்கியுள்ளது. தொழில் ரீதியாக சினிமா பைனான்ஸ் அன்புசெழியன் மற்றும் உதயநிதி இருவருக்கும் நல்ல ஒரு நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரின்ஸ் படத்தை நான்கு ஏரியாக்கள் மட்டும் வாங்கியுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்ற ஏரியாக்களில் ப்ரின்ஸ் படத்தை வெளியிடும் திரையரங்கு உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

பிரண்ட்ஸ் படத்தை இந்த முறை வாங்கி உங்கள் திரையரங்கங்கள் வெளியிட்டால், அடுத்த நாங்கள் வெளியிடும் பெரிய படங்கள் உங்கள் திரையரங்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று மறைமுக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பிரின்ஸ் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு பெரும்பாலான திரையரங்குகள் தயங்கி வருவதாகவும், இது முழுக்க முழுக்க ரெட் மூவிஸ் மூவிஸ் வெளியிடும் சர்தார் படத்தை பல திரையரங்குகளில் வெளியிட்டு அதிக வசூலை பெற வேண்டும் என்ற நோக்கில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்பில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அடுத்தடுத்து ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் மூலம் படம் வெளியிடவில்லை என்றால் இது போன்ற பல சிக்கலை சினிமா துறையினர் சந்திக்க நேரிடும் என்கின்ற மறைமுக மிரட்டலும் கூட காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரின்ஸ் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட முடியாமல் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் படம் வெளியாகும் அதே தேதியை சிவகார்த்திகேயன் தேர்வு செய்து வெளியிட முடிவு செய்ததுதான் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தரப்புக்கு சிவகார்த்திகேயன் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இருந்தும் பண்டிகை நாட்களில் படம் வெளியானால்தான் அதிக விடுமுறை காரணமாக தங்கள் படம் அதிக வசூலை பெற வேண்டும் என்ற நோக்கில் சிவகார்த்திகேயன் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.