பட்டது போதாதா.. எதுக்கு இந்த வீண் வம்பு… பா ரஞ்சித் படத்தில் இருந்து நடிகர் கார்த்திக் விலகல்.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் குறியீடுகள் படத்தின் கதாநாயகன் கார்த்திக் எதிராக அமைந்தது. குறிப்பாக வடமாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் பின்பு தான் நடிக்கும் படத்தின் காட்சிகளில் மிக நுட்பமாக கண்காணிக்க தொடங்கினர் கார்த்திக், அதே நேரத்தில் மெட்ராஸ் பட வெற்றிக்கு பின்பு நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு பெற்று அடுத்தடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தை அடைந்தார் பா.ரஞ்சித், அதே போன்று தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடும் எதிர்ப்புகளை பெற்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கினாலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டியே வந்தனர். அதற்கு காரணம் பா.ரஞ்சித் பொது மேடைகளில் பேசுகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சீண்டுவது போல் பேசுவது, அதே போன்று தனது திரைப்படத்தின் குறியீடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சீண்டுவது என காட்சிகள் அமைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை பெற்றார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்துக்கு அடைக்கப்பட்ட பா.ரஞ்சித், அவருடைய படம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்ற ஒரு தோற்றம் உருவானது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த படங்களை இயக்கிய பின்பு, சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க முன்னனி நடிகர்களை பா.ரஞ்சித் அணுகிய போது யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. தனது மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகர் கார்த்திகை அணுகியுள்ளார் பா.ரஞ்சித்.

ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய கார்த்திக், மேலும் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த பின்பு நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில். மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தால் தானும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்றும், மேலும் தன் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு தனது சினிமா வாழ்கை முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சிய நடிகர் கார்த்திக்.

எதற்கு இந்த விபரீத முடிவு என்று, பா.ரஞ்சித் இயக்கத்தில் சர்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என முடிவு செய்த்துள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தால் பா.ரஞ்சித் உடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், அதிக சம்பளம் கேட்டால் அவர்களே தன்னை வேண்டாம் என்று வேறு ஒரு நடிகரை தேர்ந்தெடுப்பார்கள் என சர்பட்டா பரபரப்பை படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்க, அதன் பின்பு கார்த்திக் பதில் நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா பரம்பரை படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் என கூறப்படுகிறது.