டேய்.. ப்ளடி ராஸ்கல்… பயில்வானை வெளுத்து வாங்கிய கே.ராஜன்.. நடிகை மீனா குறித்து பயில்வான் என்ன சொன்னார்.?

0
Follow on Google News

நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா துறையினர் குறித்த அந்தரங்கம் விஷயங்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வாருகின்றவர். இவருக்கு எதிராக யாராவது பதில் பேசினால், மேலும் அவர்களை பற்றிய தனிப்பட்ட விசயங்களை வெளியில் தெரிவித்து அவர்களை துவம்சம் செய்து விடுவார்கள், அதனாலே பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக பதில் தெரிவிக்க சினிமா துறையினர் யாரும் முன் வருவது கிடையாது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இளம் வயதிலே கணவரை இழந்துள்ள நடிகை மீனா மற்றும் தந்தையை இழந்துள்ளார் மீனா மகள் இருவரின் சோகத்தில் ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், மூத்த நடிகர்கள் பலர் வீட்டிற்கு வந்து நடிகை மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்ற்றனர், ஆனால் மீனா கணவர் மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை மீனா கணவரின் மருத்துவ சான்றித்தலை வெளியிட வேண்டும், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய பயில்வான் ரங்கநாதன், கணவர் விருப்பத்துக்கு எதிராக மீனா நடந்து கொண்டதாக கூட ஒரு பகீர் தகவலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இது சினிமா துறையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் இது குறித்து சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்.

நான் பயில்வான் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பின்பு எந்த ஒரு நடிகைகளையும், தாய்மார்களை பற்றியும் தவறாக பேசாமல் ஒரு நான்கு மாதம் அடங்கி இருந்தான். ஆனால் நடிகை மீனா கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். அதற்கு அவர் இறந்த மருத்துவ சான்றிதழை வெளியிட வேண்டும், எப்படி இறந்தார், இந்த மரணத்தில் என்ன மர்மம் இருக்கின்றது, என்று யூட்யூபில் பேசி வருகிறான்.

டேய் மருத்துவச் சான்றிதழ் வெளியிட்டால் என்ன.? வெளியிடவில்லை என்றால் உனக்கு என்னடா.? நடிகை மீனா ஒரு அடக்கமான சகோதரி, அவருடைய கணவருக்கு குறைந்த வயது, இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு, மீனாவின் இடைக்கால வாழ்க்கை இன்னும் தொடர வேண்டியது இருக்கின்றது, அது மட்டுமல்ல அந்தக் குழந்தைக்கு ஒரு தந்தை இல்லை, மீனாவுக்கு ஒரு கணவர் இல்லை, கலை உலகமே அழுகின்றது.

ஆனால் ஒருத்தன் மட்டும் இதை வைத்து வியாபாரம் செய்கின்றார், அடங்க மாட்ட… நீ.. பணம் வேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள் இறப்பில் பிண வியாபாரம் செய்யாதே, எச்சரிக்கையாக சொல்கிறேன் பிளடி ராஸ்கல், நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், ஆனால் அவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

நடிகைகளை பெண்களை அடுத்த வீட்டுப் பெண்களை தொடர்ந்து இப்படி இழிவாக பேசிக் கொண்டிருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவன் பேசிக் கொண்டே தான் இருப்பான் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான். எவனாக இருந்தாலும் சரி தாய்மார்களையும் நல்லவர்களையும் புண்படுத்தினால் மிக பெரிய கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என மிக கடுமையாக பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..