சுக்கு நூறாக உடையும் சிவகுமார் குடும்பம் …ஜோதிகாவின் மாஸ்டர் பிளான்… என்ன நடக்கிறது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நீண்ட வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு சூர்யாவின் தந்தை சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தந்தையை சமாதானம் செய்து ஜோதிகாவை திருமணம் செய்த சூர்யாவுக்கு தந்தை தரப்பில் கடும் கண்டிஷன் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது நம்மளுடைய குடும்பத்திற்கு சினிமா நடிகை ஒத்து வராது, அதனால் நம்முடைய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் குடும்பத்துடன் இருப்பார். ஆனால் உன் விருப்பப்படி நீ ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்கு பின்பு ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது குடும்பத்துடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என சிவகுமார் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்பு சில வருடம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வந்த ஜோதிகா, இரண்டு குழந்தை பிறந்த பின்பு 36 வயதினிலே படத்தில் சினிமாவில் மெல்ல ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது அவரது மாமனார் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஜோதிகா நடிக்க தொடங்கினார்.ஆனால் தொடர்ந்து ஜோதிகா சினிமாவில் நடித்து வந்தது சிவகுமாருக்கு விருப்பம் இல்லை. இந்நிலையில் சிவக்குமார், சூர்யா, கார்த்திக் என அனைவரும் தற்போது வரை ஒரு கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இவர்கள் வீட்டில் ஒரு பெரிய டைனிங் டேபிள் இருக்கிறது.

இந்த டைனிங் டேபிளில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது போன்ற கூட்டு குடும்பத்தில் வாழ்வதால் தனக்கான சுதந்திரம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த ஜோதிகா. மேலும் ஜோதிகா சினிமாவில் தொடர்ந்து நடிப்பது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்த ஜோதிகா அந்த படத்தில் இருந்து விளக்கியுள்ளார்.

மேலும் இனி தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என ஜோதிகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கணவன் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்துள்ளார் ஜோதிகா, இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வரும் சூர்யா, தற்பொழுது பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் தங்கி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் மும்பையில் படிக்க வைக்க திட்டமிட்டுள்ள ஜோதிகா ஆலோசனைபடி மும்பையில் குடும்பத்துடன் சூர்யா குடியேற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கணவர் சூர்யாவை மும்பையில் முதலீடு செய்ய வைத்ததே, சென்னையில் அவருடைய கூட்டு குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பைக்கு தனி குடித்தனம் செல்வதற்காக ஜோதிகா போட்ட மாஸ்டர் பிளான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

சிம்பு – அதிதி சங்கர் விவகாரம் முடிவுக்கு வந்தது… செம்ம மகிழ்ச்சியில் இயக்குனர் சங்கர்… என்ன நடந்தது தெரியுமா.?