நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் தனுஷ் -ஐஸ்வர்யா ஜோடி..! ஒரே அறையில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார், தனுஷ் அறிவித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஐஸ்வர்யாவும் தனது கணவர் தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் இடம்பெற்ற வாக்கியங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த நிலையில், பெயர் மற்றும் அவரவரர் அறிக்கையில் அவரவர் பெயர் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவு என்பதை மற்ற நடிகர், நடிகைகள் போன்று சாதாரமணமாக யாரும் கடந்து செல்லாமல், இதற்கான காரணத்தை தேட தொடங்கியது ஊடகங்கள், அதில் இருவரும் அவரவர் சினிமா வேலை காரணமாக ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி தனி அறையில் தங்கி இருந்து சினிமா பணிகளை செய்து வருவதாகவும், ஆனால் இவர்களை மீண்டும் இணைந்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் தற்போது மீண்டும் இணையும் சாத்தியம் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்த போது இருவரும் ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இவர்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு.

மூன்று நாட்கள் வரை அதே நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருந்துவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் சினிமா படப்பிடிப்பு காரணமாகவும், ஐஸ்வர்யா சினிமா ஆல்பம் உருவாக்குவதற்காகவும் ஆந்திர சென்ற நிலையில் இருவரும் அங்கே இருக்கும் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருந்து வந்துள்ளனர், ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அடிக்கடி இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் இருவருக்குள் பேசி சமாதானம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என கூறப்படும் நிலையில், பல முறை இருவரும் ஒன்றாக பார்ட்டிகளில் கலந்து கொண்டு மது அருந்தி மகிழ்ச்சியாக இருந்தும் உள்ளனர் என கூறப்படுகிறது, இந்நிலையில், ஜனவரி 15,16,17 என தொடர்ந்து மூன்று நாட்கள் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருந்து வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை கணவன் மனைவி இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தியவர்கள், மதுபோதையில் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர், ஏற்கனவே இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு மீண்டும் இருவருக்கும் முட்டி கொண்டதாக கூறப்படும் நிலையில் மது போதையில் இருவரும் கடுமையாக வார்த்தையால் மோதி கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் இனி இணைந்து வாழ வேண்டாம் பிரிந்து வாழ்வோம் என போதையில் முடிவு செய்த நிலையில்.

அடுத்த நாள் 17ம் தேதி ஐஸ்வர்யா, கணவர் தனுஷ் உடன் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியேறி தனி அறைக்கு சென்றுள்ளார், இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி 17ம் தேதி இருவரும் பேசி பிரிவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்று இரவே தனுஷ் முதலில் ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவிப்பு வெளியிட அடுத்த இரண்டு மணி நேரத்தில் தனுஷை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இருவரும் பிரிவதர்க்கு முன்பு மூன்று நாட்கள் ஒரே அறையில் ஒன்றாக தான் இருந்தார்கள் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.

விஷாலை நம்பி மோசம் போன சிவகுமார் குடும்பம்.! ஒட்டு மொத்த குடும்ப கௌரவமும் போச்சு.. ஏன் தெரியுமா.?